Your browser does not support the audio element.
audio
1658 தெள்ளியீர்! தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் *
வெள்ளியீர்! வெய்யவிழுநிதிவண்ணர் * ஓ!
துள்ளுநீர்க் கண்ணபுரம்தொழுதாளிவள்
கள்வியோ! * கைவளைகொள்வதுதக்கதே? (2)
1659 நீணிலாமுற்றத்து நின்றுஇவள்நோக்கினாள் *
காணுமோ! கண்ணபுரமென்றுகாட்டினாள் *
பாணனார்திண்ணமிருக்க இனிஇவள்
நாணுமோ? * நன்றுநன்றுநறையூரர்க்கே.
1660 அருவிசோர்வேங்கடம் நீர்மலையென்றுவாய்
வெருவினாள் * மெய்யம்வினவியிருக்கின்றாள் *
பெருகுசீர்க் கண்ணபுரமென்றுபேசினாள்
உருகினாள் * உள்மெலிந்தாள் இதுஎன்கொலோ? (2)
1661 உண்ணும்நாளில்லை உறக்கமுந்தானில்லை *
பெண்மையும் சாலநிறைந்திலள் பேதைதான் *
கண்ணனூர் கண்ணபுரம்தொழும், கார்க்கடல்
வண்ணர்மேல் * எண்ணம்இவட்கு இதுஎன்கொலோ?
1662 கண்ணனூர்கண்ணபுரம் தொழும்காரிகை *
பெண்மையும்தன்னுடை உண்மையுரைக்கின்றாள் *
வெண்ணெயுண்டுஆப்புண்ட வண்ணம்விளம்பினாள் *
வண்ணமும் பொன்னிறமாவதுஒழியுமே.
1663 வடவரைநின்றும்வந்து இன்றுகணபுரம் *
இடவகைகொள்வது யாமென்று பேசினாள் *
மடவரல்மாதர்என்பேதை இவர்க்குஇவள்
கடவதென்? * கண்துயில் இன்றுஇவர்கொள்ளவே.
1664 தரங்கநீர்பேசினும் தண்மதிகாயினும் *
இரங்குமோ? எத்தனைநாளிருந்துஎள்கினாள்? *
துரங்கம்வாய்கீண்டுகந்தானது தொன்மையூர் *
அரங்கமே யென்பது இவள்தனக்குஆசையே. (2)
1665 தொண்டெல்லாம்நின்னடியே தொழுதுய்யுமா
கண்டு * தான்கணபுரம் தொழப்போயினாள் *
வண்டுலாம்கோதைஎன்பேதை மணிநிறம்
கொண்டுதான் * கோயின்மைசெய்வது தக்கதே?
1666 முள்ளெயிறேய்ந்தில கூழைமுடிகொடா *
தெள்ளியளென்பதோர்தேசிலள் என்செய்கேன்? *
கள்ளவிழ்சோலைக் கணபுரம்கைதொழும்
பிள்ளையை * பிள்ளையென்றெண்ணப்பெறுவரே?
1667 கார்மலி கண்ணபுரத்தெம்மடிகளை *
பார்மலிமங்கையர்கோன் பரகாலன்சொல் *
சீர்மலிபாடல் இவைபத்தும்வல்லவர் *
நீர்மலிவையத்து நீடுநிற்பார்களே. (2)