Your browser does not support the audio element.
audio
1908 மானமுடைத்துஉங்களாயர்குலம்
அதனால்பிறர்மக்கள்தம்மை *
ஊனமுடையனசெய்யப்பெறாயென்று
இரப்பன்உரப்பகில்லேன் *
நானுமுரைத்திலேன்நந்தன்பணித்திலன்
நங்கைகாள்! நானென்செய்கேன்? *
தானும்ஓர்கன்னியும்கீழையகத்துத்
தயிர்கடைகின்றான்போலும். (2)
1909 காலையெழுந்துகடைந்தஇம்மோர்விற்கப் போகின்றேன்
கண்டேபோனேன் *
மாலைநறுங்குஞ்சிநந்தன்மகனல்லால்
மற்றுவந்தாரும்இல்லை *
மேலையகத்துநங்காய்! வந்துகாண்மின்கள்
வெண்ணெயேயன்று * இருந்த
பாலும்பதின்குடம்கண்டிலேன்
பாவியேன்என்செய்கேன்? என்செய்கேனோ?
1910 தெள்ளியவாய்ச்சிறியான்நங்கைகாள்!
உறிமேலைத்தடாநிறைந்த *
வெள்ளிமலையிருந்தாலொத்தவெண்ணெயை
வாரிவிழுங்கியிட்டு *
கள்வனுறங்குகின்றான்வந்துகாண்மின்கள்
கையெல்லாம்நெய், வயிறு
பிள்ளைபரமன்று * இவ்வேழுலகும்கொள்ளும்
பேதையேன்என்செய்கேனோ?
1911 மைந்நம்புவேல்கண்நல்லாள்
முன்னம்பெற்றவளைவண்ணநன்மாமேனி *
தன்னம்பிநம்பியும்இங்குவளர்ந்தது
அவன்இவைசெய்தறியான் *
பொய்ந்நம்பிபுள்ளுவன்கள்வம்பொதியறை
போகின்றவாதவழ்ந்திட்டு *
இந்நம்பிநம்பியா ஆய்ச்சியர்க்குய்வில்லை
என்செய்கேன்? என்செய்கேனோ?
1912 தந்தைபுகுந்திலன்நான்இங்கிருந்திலேன்
தோழிமார் ஆருமில்லை *
சந்தமலர்க்குழலாள்
தனியேவிளையாடுமிடம்குறுகி *
பந்துபறித்துத்துகில்பற்றிக்கீறிப்
படிறன்படிறுசெய்யும் *
நந்தன்மதலைக்கிங்கென்கடவோம்? நங்காய்!
1913 மண்மகள்கேள்வன்மலர்மங்கைநாயகன்
நந்தன்பெற்றமதலை *
அண்ணல்இலைக்குழலூதிநம்சேரிக்கே
அல்லில்தான்வந்தபின்னை *
கண்மலர்சோர்ந்துமுலைவந்துவிம்மிக்
கமலச்செவ்வாய்வெளுப்ப *
என்மகள்வண்ணம்இருக்கின்றவாநங்காய்!
1914 ஆயிரம்கண்ணுடைஇந்திரனாருக்கென்று
ஆயர்விழவெடுப்ப *
பாசனநல்லனபண்டிகளால்
புகப்பெய்தஅதனையெல்லாம் *
போயிருந்துஅங்கொருபூதவடிவுகொண்டு
உன்மகன்இன்றுநங்காய்! *
மாயன்அதனையெல்லாம்முற்றவாரி
வளைத்து உண்டிருந்தான்போலும்.
1915 தோய்த்ததயிரும்நறுநெய்யும்பாலும்
ஓரோர்குடம்துற்றிடுமென்று *
ஆய்ச்சியர்கூடியழைக்கவும்
நான்இதற்கெள்கிஇவனைநங்காய்! *
சோத்தம்பிரான்! இவைசெய்யப்பெறாயென்று
பேய்ச்சிமுலையுண்டபின்னை
இப்பிள்ளையைப்பேசுவதுஅஞ்சுவனே.
1916 ஈடும்வலியுமுடைய
இந்நம்பிபிறந்தஎழுதிங்களில் *
ஏடலர்கண்ணியினானைவளர்த்தி
யமுனைநீராடப்போனேன் *
சேடன்திருமறுமார்வன்கிடந்து
திருவடியால் * மலைபோல்
ஓடும்சகடத்தைச்சாடியபின்னை
உரப்புவது அஞ்சுவேனே.
1917 அஞ்சுவன்சொல்லியழைத்திடநங்கைகாள்!
ஆயிரநாழிநெய்யை *
பஞ்சியமெல்லடிப்பிள்ளைகளுண்கின்ற
பாகந்தான்வையார்களே *
கஞ்சன்கடியன்கறவெட்டுநாளில்
என்கைவலத்தாதுமில்லை *
நெஞ்சத்திருப்பனசெய்துவைத்தாய்நம்பீ!
என்செய்கேன? என்செய்கேனோ?
1918 அங்ஙனம்தீமைகள் செய்வார்களோ?
நம்பீ! ஆயர்மடமக்களை *
பங்கயநீர்குடைந்தாடுகின்றார்கள்
பின்னேசென்றொளித்திருந்து *
அங்குஅவர்பூந்துகில்வாரிக்கொண்டிட்டு
அரவேரிடையார்இரப்ப *
மங்கைநல்லீர்! வந்துகொண்மினென்று
மரமேறியிருந்தாய்போலும்.
1919 அச்சம்தினைத்தனையில்லையிப்பிள்ளைக்கு
ஆண்மையும்சேவகமும் *
உச்சியில்முத்திவளர்த்தெடுத்தேனுக்கு
உரைத்திலன்தானின்றுபோய் *
பச்சிலைப்பூங்கடம்பேறி
விசைகொண்டுபாய்ந்துபுக்கு * ஆயிரவாய்
நச்சழற்பொய்கையில்நாகத்தினோடு
பிணங்கிநீவந்தாய்போலும்.
1920 தம்பரமல்லனஆண்மைகளைத்
தனியேநின்றுதாம்செய்வாரோ? *
எம்பெருமான்! உன்னைப்பெற்றவயிறுடையேன்
இனியானென்செய்கேன்? *
அம்பரமேழும்அதிருமிடிகுரல்
அங்க னற்செங்கணுடை *
வம்பவிழ்கானத்துமால்விடையோடு
1921 அன்னநடைமடவாய்ச்சிவயிறடித்து அஞ்ச
அருவரைபோல *
மன்னுகருங்களிற்றாருயிர்வவ்விய
மைந்தனை, மாகடல்சூழு *
கன்னிநன்மாமதிள்மங்கையர்காவலன்
காமருசீர்க்கலிகன்றி *
இன்னிசைமாலைகளீரேழும்வல்லவர்க்கு
ஏதும்இடரில்லையே. (2)