1901 தளர்ந்திட்டுஇமையோர்சரண்தாவெனத்
தான்சரணாய், முரணாயவனை * உகிரால்
பிளந்திட்டுஅமரர்க்கருள்செய்துகந்த
பெருமான்திருமால், விரிநீருலகை *
வளர்ந்திட்டதொல்சீர்விறல்மாவலியை
மண்கொள்ளவஞ்சித்துஒருமாண்குறளாய் *
அளந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.