Your browser does not support the audio element.
audio
3585 அங்குமிங்கும் வானவர்தானவர் யாவரும் *
எங்குமிணையையென்று உன்னையறியகிலாதுஅலற்றி *
அங்கஞ்சேரும் பூமகள்மண்மகளாய்மகள் *
சங்குசக்கரக்கையவனென்பர் சரணமே. (2)
3586 சரணமாகிய நான்மறைநூல்களும்சாராதே *
மரணம்தோற்றம் வான்பிணிமூப்பென்றிவைமாய்த்தோம் *
கரணப்பல்படை பற்றறவோடும்கனலாழி *
அரணத்திண்படையேந்திய ஈசற்காளாயே.
3587 ஆளுமாளார் ஆழியும்சங்கும்சுமப்பார்தாம் *
வாளும்வில்லுங்கொண்டு பின்செல்வார்மற்றில்லை *
தாளும்தோளும் கைகளையாரத்தொழக்காணேன் *
நாளும்நாளும்நாடுவன் அடியேன்ஞாலத்தே.
3588 ஞாலம்போனகம்பற்றி ஓர்முற்றாவுருவாகி *
ஆலம்பேரிலை அன்னவசஞ்செய்யும்அம்மானே! *
காலம்பேர்வது ஓர்காரிருள்ஊழியொத்துளதால் * உன்
கோலங்காரேழில் காணலுற்றுஆழுங்கொடியேற்கே.
3589 கொடியார்மாடக் கோளூரகத்தும்புளிங்குடியும் *
மடியாதின்னே நீதுயில்மேவிமகிழ்ந்ததுதான் *
அடியாரல்லல்தவிர்த்தஅசைவோ? அன்றேல்இப்
படிதான் * நீண்டுதாவிய அசைவோ? பணியாயே. (2)
3590 பணியாவமரர் பணிவும்பண்பும்தாமேயாம் *
அணியாராழியும் சங்கமும்ஏந்துமவர்காண்மின் *
தணியாவெந்நோய் உலகில்தவிர்ப்பான் * திருநீல
மணியார்மேனியோடு என்மனம்சூழவருவாரே.
3591 வருவார்செல்வார் வண்பரிசாரத்திருந்த * என்
திருவாழ்மார்வற்கு என்திறம்சொல்லார்செய்வதென்? *
உருவார்சக்கரம் சங்குசுமந்துஇங்கும்மோடு *
ஒருபாடுழல்வான் ஓரடியானுமுளனென்றே. (2)
3592 என்றே? என்னை உன்னேரார்கோலத்திருந்தடிக்கீழ் *
நின்றேயாட்செய்ய நீகொண்டருளநினைப்பதுதான் *
குன்றேழ்பாரேழ் சூழ்கடல்ஞாலம்முழுவேழும் *
நின்றேதாவிய நீள்கழலாழித்திருமாலே!
3593 திருமால்! நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள் * எம்
பெருமான்தன்மையை யாரறிகிற்பார்? பேசியென்? *
ஒருமாமுதல்வா! ஊழிப்பிரான்! என்னையாளுடை *
கருமாமேனியன்! என்பன் என்காதல்கலக்கவே.
3594 கலக்கமில்லாநல்தவமுனிவர் கரைகண்டோர் *
துளக்கமில்லா வானவரெல்லாம்தொழுவார்கள் *
மலக்கமெய்த மாகடல்தன்னைக்கடைந்தானை *
உலக்கநாம்புகழ்கிற்பது என்செய்வது? உரையீரே.
3595 உரையாவெந்நோய்தவிர அருள்நீண்முடியானை *
வரையார்மாட மன்னுகுருகூர்ச்சடகோபன் *
உரையேய்சொல்தொடை ஓராயிரத்துள்இப்பத்தும் *
நிரையேவல்லார் நீடுலகத்துப்பிறவாரே. (2)