Your browser does not support the audio element.
audio
3508 பாமருமூவுலகும்படைத்த பற்பநாபாவோ! *
பாமருமூவுலகும் அளந்தபற்பபாதாவோ! *
தாமரைக்கண்ணாவோ! தனியேன்தனியாளாவோ! *
தாமரைக்கையாவோ! உன்னையென்றுகொல்சேர்வதுவே? (2)
3509 என்றுகொல்? சேர்வதந்தோ! அரன்நான்முகனேத்தும் * செய்ய
நின்திருப்பாதத்தையான் நிலம்நீரெரிகால் * விண்ணுயிர்
என்றிவைதாம்முதலாமுற்றுமாய் நின்றவெந்தாயோ! *
குன்றெடுத்தாநிரைமேய்த்து அவைகாத்த எம்கூத்தாவோ!
3510 காத்தஎங்கூத்தாவோ! மலையேந்திக்கல்மாரிதன்னை *
பூத்தண்துழாய்முடியாய்! புனைகொன்றையஞ்செஞ்சடையாய்! *
வாய்த்தவென்நான்முகனே! வந்தென்னாருயிர்நீயானால் *
ஏத்தருங்கீர்த்தியினாய்! உன்னைஎங்குத்தலைப்பெய்வனே?
3511 எங்குத்தலைப்பெய்வன்நான்? எழில்மூவுலகும்நீயே *
அங்குயர்முக்கண்பிரான் பிரமபெருமானவன்நீ *
வெங்கதிர்வச்சிரக்கை இந்திரன்முதலாத்தெய்வம்நீ *
கொங்கலர்தண்ணந்துழாய்முடி என்னுடைக்கோவலனே!
3512 என்னுடைக்கோவலனே! என்பொல்லாக்கரு மாணிக்கமே! *
உன்னுடையுந்திமலர் உலகமவைமூன்றும்பரந்து *
உன்னுடைச்சோதிவெள்ளத்து அகம்பாலுன்னைக்கண்டு கொண்டிட்டு *
என்னுடையாருயிரார் எங்ஙனேகொல்வந்தெய்துவரே?
3513 வந்தெய்துமாறறியேன் மல்குநீலச்சுடர்தழைப்ப *
செஞ்சுடர்ச்சோதிகள்பூத்து ஒருமாணிக்கம்சேர்வதுபோல் *
அந்தரமேற்செம்பட்டோடு அடிஉந்திகைமார்வுகண்வாய் *
செஞ்சுடர்ச்சோதிவிடவுறை என்திருமார்பனையே.
3514 என்திருமார்பன்தன்னை என்மலைமகள்கூறன்தன்னை *
என்றுமென்நாமகளை அகம்பாற்கொண்டநான்முகனை *
நின்றசசிபதியை நிலங்கீண்டெயில்மூன்றெரித்த *
வென்றுபுலம்துரந்த விசும்பாளியைக்காணேனோ?
3515 ஆளியைக்காண்பரியாய் அரிகாண்நரியாய் * அரக்கர்
ஊளையிட்டன்றிலங்கைகடந்து பிலம்புக்கொளிப்ப *
மீளியம்புள்ளைக்கடாய் விறல்மாலியைக்கொன்று * பின்னும்
ஆளுயர்குன்றங்கள்செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?
3516 காண்டுங்கொலோ? நெஞ்சமே! கடியவினையேமுயலும் *
ஆண்திறல்மீளிமொய்ம்பின் அரக்கன்குலத்தைத்தடிந்து *
மீண்டுமவன்தம்பிக்கே விரிநீரிலங்கையருளி *
ஆண்டுதன்சோதிபுக்க அமரரரியேற்றினையே.
3517 ஏற்றரும்வைகுந்தத்தை அருளும்நமக்கு * ஆயர்குலத்து
ஈற்றிளம்பிள்ளையொன்றாய்ப்புக்கு மாயங்களேயியற்றி *
கூற்றியல்கஞ்சனைக்கொன்று ஐவர்க்காயக்கொடுஞ்சேனை தடிந்து *
ஆற்றல்மிக்கான் பெரியபரஞ்சோதிபுக்கவரியே.
3518 புக்கவரியுருவாய் அவுணனுடல்கீண்டுகந்த *
சக்கரச்செல்வன்தன்னைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
மிக்கவோராயிரத்துள் இவைபத்தும்வல்லாரவரை *
தொக்குப்பல்லாண்டிசைத்துக் கவரிசெய்வரேழையரே. (2)