1224 தளைக்கட்டவிழ்தாமரைவைகுபொய்கைத்
தடம்புக்கு, அடங்காவிடங்கால்அரவம் *
இளைக்கத்திளைத்திட்டுஅதனுச்சிதன்மேல்
அடிவைத்தஅம்மானிடம் * மாமதியம்
திளைக்கும்கொடிமாளிகைசூழ் தெருவில்
செழுமுத்துவெண்ணெற்கெனச்சென்று * முன்றில்
வளைக்கைநுளைப்பாவையர்மாறு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!