Chapter 9

Thirunāngur Thiruvaikundavinnagaram - (சலம் கொண்ட)

திருநாங்கூர் வைகுந்தவிண்ணகரம்
Thirunāngur Thiruvaikundavinnagaram - (சலம் கொண்ட)
Introduction & Details
Recitation
Translation

PT 3.9.1

1228 சலங்கொண்டஇரணியனது அகல்மார்வம் கீண்டு

தடங்கடலைக்கடைந்த அமுதம்கொண்டுகந்தகாளை *

நலங்கொண்டகருமுகில்போல் திருமேனி அம்மான்

நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

சலங்கொண்டுமலர்சொரியும் மல்லிகைஒண்செருந்தி

சண்பகங்கள்மணநாறும் வண்பொழிலினூடே *

வலங்கொண்டு கயலோடிவிளையாடு நாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே! (2)

PT 3.9.2

1229 திண்ணியதோரரியுருவாய்த்திசையனைத்தும் நடுங்கத்

தேவரொடுதானவர்கள் திசைப்ப * இரணியனை

நண்ணிஅவன்மார்வகலத்து உகிர்மடுத்தநாதன்

நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

எண்ணில்மிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையும்

ஏழிசையும்கேள்விகளும் இயன்ற பெருங்குணத்தோர் *

மண்ணில்மிகுமறையவர்கள் மலிவெய்து நாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

PT 3.9.3

1230 அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளுமெல்லாம்

அமுதுசெய்ததிருவயிற்றன் அரன்கொண்டுதிரியும் *

முண்டமதுநிறைத்து அவன்கண்சாபமதுநீக்கும்

முதல்வனவன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

எண்திசையும்பெருஞ்செந்நல் இளந்தெங்குகதலி

இலைக்கொடிஒண்குலைக்கமுகோடு இசலிவளம் சொரிய *

வண்டுபலஇசைபாடமயிலாலு நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

PT 3.9.4

1231 கலையிலங்கும் அகலல்குல் அரக்கர்க்குலக்கொடியைக்

காதொடுமூக்குடன்அரியக்கதறிஅவளோடி *

தலையில்அங்கைவைத்து மலையிலங்கைபுகச்செய்த

தடந்தோளன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

சிலையிலங்கு மணிமாடத்துச்சிமிசைச்சூலம்

செழுங்கொண்டலகடிரியச் சொரிந்த செழுமுத்தம் *

மலையிலங்குமாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

PT 3.9.5

1232 மின்னனையநுண்மருங்குல்மெல்லியற்கா இலங்கை

வேந்தன்முடியொருபதும் தோளிருபதும் போயுதிர *

தன்னிகரில்சிலைவளைத்து அன்றுஇலங்கைபொடி செய்த

தடந்தோளன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

செந்நெலொடுசெங்கமலம் சேல்கயல்கள் வாளை

செங்கழுநீரொடுமிடைந்துகழனிதிகழ்ந்துஎங்கும் *

மன்னுபுகழ்வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

PT 3.9.6

1233 பெண்மைமிகுவடிவுகொடுவந்தவளைப் பெரிய

பேயினதுஉருவுகொடுமாளஉயிருண்டு *

திண்மைமிகுமருதொடு நற்சகடமிறுத்தருளும்

தேவனவன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

உண்மைமிகுமறையொடு நற்கலைகள்நிறை பொறைகள்

உதவுகொடையென்றுஇவற்றினொழிவில்லா * பெரிய

வண்மைமிகுமறையவர்கள் மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

PT 3.9.7

1234 விளங்கனியைஇளங்கன்றுகொண்டுஉதிரஎறிந்து

வேல்நெடுங்கணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய் *

உளங்குளிரஅமுதுசெய்து இவ்வுலகுண்டகாளை

உகந்தினிதுநாள்தோறும் மருவியுறைகோயில் *

இளம்படிநற்கமுகுகுலைத்தெங்குகொடிச்செந்நெல்

ஈன்கரும்புகண்வளரக்கால்தடவும்புனலால் *

வளங்கொண்டபெருஞ்செல்வம்வளருமணி நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

PT 3.9.8

1235 ஆறாதசினத்தின்மிகுநரகனுரம்அழித்த

அடலாழித்தடக்கையன், அலர்மகட்கும்அரற்கும் *

கூறாகக்கொடுத்தருளும்திருவுடம்பன் இமையோர்

குலமுதல்வன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

மாறாதமலர்க்கமலம் செங்கழுநீர்ததும்பி

மதுவெள்ளம்ஒழுக வயலுழவர்மடையடைப்ப *

மாறாதபெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

PT 3.9.9

1236 வங்கமலிதடங்கடலுள்வானவர்களோடு

மாமுனிவர்பலர்கூடிமாமலர்கள்தூவி *

எங்கள்தனிநாயகனே! எமக்குஅருளாயென்னும்

ஈசனவன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

செங்கயலும்வாளைகளும் செந்நெலிடைக்குதிப்பச்

சேலுகளும்செழும்பணைசூழ்வீதிதொறும் மிடைந்து *

மங்குல்மதியகடுரிஞ்சுமணிமாட நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

PT 3.9.10

1237 சங்குமலிதண்டுமுதல்சக்கரமுன்ஏந்தும்

தாமரைக்கண்நெடியபிரான் தானமரும்கோயில் *

வங்கமலிகடலுலகில்மலிவெய்து நாங்கூர்

வைகுந்தவிண்ணகர்மேல், வண்டறையும் பொழில்சூழ் *

மங்கையர்தம்தலைவன், மருவலர்தம்உடல்துணிய

வாள்வீசும்பரகாலன்கலிகன்றிசொன்ன *

சங்கமலிதமிழ்மாலைபத்துஇவைவல்லார்கள்

தரணியொடுவிசும்பாளும்தன்மைபெறுவாரே. (2)