Your browser does not support the audio element.
audio
1982 நிலையிடமெங்குமின்றிநெடுவெள்ளம் உம்பர்
வளநாடுமூடஇமையோர் *
தலையிடமற்றெமக்குஓர்சரணில்லையென்ன
அரணாவனென்னு அருளால் *
அலைகடல்நீர்க்குழம்பஅகடாடவோடி
அகல்வானுரிஞ்ச * முதுகில்
மலைகளைமீதுகொண்டுவருமீனைமாலை
மறவாது இறைஞ்சுஎன்மனனே! (2)
1983 செருமிகுவாளெயிற்றஅரவொன்றுசுற்றித்
திசைமண்ணும்விண்ணும்உடனே *
வெருவரவெள்ளைவெள்ளம்முழுதும்குழம்ப
இமையோர்கள்நின்றுகடைய *
பருவரையொன்றுநின்றுமுதுகில்பரந்து
சுழலக்கிடந்துதுயிலும் *
அருவரையன்னதன்மையடலாமையான
திருமால்நமக்குஓரரணே.
1984 தீதறுதிங்கள்பொங்குசுடரும்பரும்பர்
உலகேழினோடும்உடனே *
மாதிரமண்சுமந்தவடகுன்றும் நின்ற
மலையாறும்ஏழுகடலும் *
பாதமர்சூழ்குளம்பினகமண்டலத்தின்
ஒருபாலொடுங்க, வளர்சேர் *
ஆதிமுன்ஏனமாகிஅரணாயமூர்த்தி
யது நம்மையாளுமரசே.
1985 தளையவிழ்கோதைமாலைஇருபால் தயங்க
எரிகான்றிரண்டுதறுகண் *
அளவெழவெம்மைமிக்கஅரியாகி
அன்றுபரியோன்சினங்களவிழ *
வளையுகிராளிமொய்ம்பின்மறவோனதாகம்
மதியாதுசென்றுஒருகிரால் *
பிளவெழவிட்டகுட்டமது, வையமூடு
பெருநீரின்மும்மைபெரிதே.
1986 வெந்திறல்வாணன் வேள்வியிடமெய்தி
அங்குஓர்குறளாகிமெய்ம்மையுணர *
செந்தொழில்வேதநாவின்முனியாகி
வையம்அடிமூன்றிரந்துபெறினும் *
மந்திரமீதுபோகிமதிநின்றிறைஞ்ச
மலரோன்வணங்க, வளர்சேர் *
அந்தரமேழினூடுசெலவுய்த்தபாத
மது நம்மையாளுமரசே.
1987 இருநிலமன்னர்தம்மைஇருநாலுமெட்டும்
ஒருநாலுமொன்றும்உடனே *
செருநுதலூடுபோகிஅவராவிமங்க
மழுவாளில் வென்றதிறலோன் *
பெருநிலமங்கைமன்னர்மலர்மங்கைநாதர்
புலமங்கைகேள்வர்புகழ்சேர் *
பெருநிலமுண்டுமிழ்ந்தபெருவாயராகி
அவர்நம்மைஆள்வர்பெரிதே.
1988 இலைமலிபள்ளியெய்தியிதுமாயமென்ன
இனமாயமான்பின், எழில்சேர் *
அலைமலிவேற்கணாளை அகல்விப்பதற்கு
ஓருருவாயமானையமையா *
கொலைமலியெய்துவித்தகொடியோனிலங்கை
பொடியாக, வென்றியமருள் *
சிலைமலிசெஞ்சரங்கள்செலவுய்த்த நங்கள்
1989 முன்னுலகங்களேழும்இருள்மண்டியுண்ண
முதலோடுவீடுமறியாது *
என்னிது? வந்ததென்னஇமையோர்திசைப்ப
எழில்வேதமின்றிமறைய *
பின்னும்வானவர்க்கும்முனிவர்க்கும்நல்கி
இருள்தீர்ந்திவ்வையம்மகிழ *
அன்னமதாயிருந்துஅங்கறநூலுரைத்த
அதுநம்மையாளுமரசே.
1990 துணைநிலைமற்றெமக்கொருளதென்றிராது
தொழுமின்கள்தொண்டர்! தொலைய *
உணமுலைமுன்கொடுத்தஉரவோளதாவி,
உகவுண்டுவெண்ணெய்மருவி *
பணமுலையாயர்மாதர் உரலோடுகட்ட
அதனோடுமோடி, அடல்சேர் *
இணைமருதிற்றுவீழநடைகற்றதெற்றல்
வினைபற்றறுக்கும்விதியே.
1991 கொலைகெழுசெம்முகத்தகளிறொன்றுகொன்று
கொடியோனிலங்கைபொடியா *
சிலைகெழுசெஞ்சரங்கள்செலவுய்த்த நங்கள்
திருமாலை, வேலைபுடைசூழ் *
கலிகெழுமாடவீதி வயல்மங்கைமன்னு
கலிகன்றிசொன்னபனுவல் *
ஒலிகெழுபாடல் பாடியுழல்கின்றதொண்டரவர்
ஆள்வர்உம்பருலகே. (2)