1859 பத்துநீள்முடியும்அவற்றிரட்டிப்
பாழித்தோளும் படைத்தவன்செல்வம் *
சித்தம்மங்கையர்பால்வைத்துக்கெட்டான்
செய்வதொன்றறியாஅடியோங்கள் *
ஒத்ததோளிரண்டும்ஒருமுடியும்
ஒருவர்தந்திறத்தோமன்றிவாழ்ந்தோம் *
அத்த! எம்பெருமான்! எம்மைக்கொல்லேல்
அஞ்சினேம்தடம்பொங்கத்தம்பொங்கோ.