713 தண்ணந்தாமரைக்கண்ணனே! கண்ணா!
தவழ்ந்தெழுந்துதளர்ந்ததோர்நடையால் *
மண்ணில்செம்பொடியாடிவந்து என்தன்
மார்வில்மன்னிடப்பெற்றிலேனந்தோ *
வண்ணச்செஞ்சிறுகைவிரலனைத்தும்
வாரிவாய்க்கொண்டஅடிசிலின்மிச்சல் *
உண்ணப்பெற்றிலேன் ஓ! கொடுவினையேன்
என்னைஎஞ்செய்யப்பெற்றதெம்மோயே?