700 கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக்
கடைக்கணித்து * ஆங்கேயொருத்திதன்பால்
மருவிமனம்வைத்துமற்றொருத்திக்குரைத்து
ஒருபேதைக்குப்பொய்குறித்து *
புரிகுழல்மங்கையொருத்திதன்னைப்
புணர்தி அவளுக்கும்மெய்யனல்லை *
மருதிறுத்தாய்! உன்வளர்த்தியூடே
வளர்கின்றதாலுன்றன்மாயைதானே.