Your browser does not support the audio element.
audio
3387 துவளில்மாமணிமாடமோங்கு
தொலைவில்லிமங்கலம்தொழு
மிவளை * நீரினியன்னைமீர்
உமக்காசையில்லைவிடுமினோ *
தவளவொண்சங்குசக்கரமென்றும்
தாமரைத்தடங்கணென்றும் *
குவளையொண்மலர்க்கண்கள்நீர்மல்க
நின்றுநின்றுகுமுறுமே. (2)
3388 குமுறுமோசைவிழவொலித்
தொலைவில்லிமங்கலம்கொண்டுபுக்கு *
அமுதமென்மொழியாளை
நீருமக்குஆசையின்றியகற்றினீர் *
திமிர்கொண்டாலொத்துநிற்கும் மற்றிவள்
தேவதேவபிரானென்றே *
நிமியும்வாயொடுகண்கள்நீர்மல்க
நெக்கொசிந்துகரையுமே.
3389 கரைகொள்பைம்பொழில்தண்பணைத் தொலை
வில்லிமங்கலம்கொண்டுபுக்கு *
உரைகொளின்மொழியாளை
நீருமக்காசை யின்றியகற்றினீர் *
திரைகொள்பௌவத்துச்சேர்ந்ததும்
திசைஞாலம்தாவியளந்ததும் *
நிரைகள்மேய்த்ததுமேபிதற்றி
நெடுங்கண்நீர்மல்கநிற்குமே.
3390 நிற்கும்நான்மறைவாணர்வாழ்
தொலைவில்லிமங்கலங்கண்டபின் *
அற்கமொன்றுமறவுறாள்
மலிந்தாள்கண்டீரிவளன்னைமீர் *
கற்குங்கல்வியெல்லாம் கருங்கடல்
வண்ணன்கண்ணபிரானென்றே *
ஒற்கமொன்றுமிலள் உகந்துகந்து
உள்மகிழ்ந்துகுழையுமே.
3391 குழையும்வாள்முகத்தேழையைத்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
இழைகொள்சோதிச்செந்தாமரைக்கண்ணபிரான்
இருந்தமைகாட்டினீர் *
மழைபெய்தாலொக்குங்கண்ணநீரினொடு
அன்றுதொட்டும்மையாந்து * இவள்
நுழையுஞ்சிந்தையளன்னைமீர்! தொழும்
அத்திசையுற்றுநோக்கியே.
3392 நோக்கும்பக்கமெல்லாம் கரும்பொடு
செந்நெலோங்கு செந்தாமரை *
வாய்க்கும்தண்பொருநல் வடகரை
வண்தொலைவில்லிமங்கலம் *
நோக்குமேல்அத்திசையல்லால்
மறுநோக்கிலள்வைகல்நாடொறும் *
வாய்க்கொள்வாசகமும் மணிவண்ணன்
நாமமேயிவளன்னைமீர்.
3393 அன்னைமீர்! அணிமாமயில் சிறுமானிவள்
நம்மைக்கைவலிந்து *
என்னவார்த்தையுங்கேட்குறாள்
தொலைவில்லிமங்கலமென்றல்லால் *
முன்னம்நோற்றவிதிகொலோ? முகில்
வண்ணன்மாயங்கொலோ? * அவன்
சின்னமும்திருநாமமும் இவள்
வாயனகள்திருந்தவே.
3394 திருந்துவேதமும்வேள்வியும்
திருமாமகளிரும்தாம் * மலிந்
திருந்துவாழ்பொருநல்
வடகரைவண்தொலைவில்லிமங்கலம் *
கருந்தடங்கண்ணிகைதொழுத
அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும் *
இருந்திருந்துதரவிந்தலோசன!
என்றேன்றே நைந்திரங்குமே. (2)
3395 இரங்கிநாள்தொறும்வாய்வெரீஇ
இவள்கண்ணநீர்களலமர *
மரங்களுமிரங்குவகை
மணிவண்ணவோ! என்று கூவுமால் *
துரங்கம்வாய்பிளந்தானுறை
தொலைவில்லிமங்கலமென்று * தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த்
திருநாமங்கற்றதற்பின்னையே.
3396 பின்னைகொல்? நிலமாமகள்கொல்?
திருமகள்கொல்? பிறந்திட்டாள் *
என்னமாயங்கொலோ? இவள்நெடுமா
லென்றேநின்றுகூவுமால் *
முன்னிவந்தவன் நின்றிருந்துறையும்
தொலைவில்லிமங்கலம்
சென்னியால்வணங்கும் * அவ்வூர்த்திருநாமம்
கேட்பதுசிந்தையே.
3397 சிந்தையாலும்சொல்லாலும்
செய்கையினாலும் தேவபிரானையே *
தந்தைதாயென்றடைந்த
வண்குருகூரவர்சடகோபன் *
முந்தையாயிரத்துள்இவை
தொலைவில்லிமங்கலத்தைச்சொன்ன *
செந்தமிழ்பத்தும்வல்லார்
அடிமைசெய்வார்திருமாலுக்கே. (2)