Uttering Kaṇṇaṉ's Name, She Rejoices.
கண்ணன் பெயர் கூறி இவள் மகிழ்கிறாள்
3390 நிற்கும்நான்மறைவாணர்வாழ்
தொலைவில்லிமங்கலங்கண்டபின் *
அற்கமொன்றுமறவுறாள்
மலிந்தாள்கண்டீரிவளன்னைமீர் *
கற்குங்கல்வியெல்லாம் கருங்கடல்
வண்ணன்கண்ணபிரானென்றே *
ஒற்கமொன்றுமிலள் உகந்துகந்து
உள்மகிழ்ந்துகுழையுமே.