Your browser does not support the audio element.
audio
3024 முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே! *
அந்நாள்நீதந்த ஆக்கையின்வழியுழல்வேன் *
வெந்நாள்நோய்வீய வினைகளைவேரறப்பாய்ந்து *
எந்நாள்யானுன்னை இனிவந்துகூடுவனே? (2)
3025 வன்மாவையமளந்த எம்வாமனா! * நின்
பன்மாமாயப் பல்பிறவியில்படிகின்றயான் *
தொன்மாவல்வினைத் தொடர்களை முதலரிந்து *
நின்மாதாள்சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
3026 கொல்லாமாக்கோல் கொலைசெய்து, பாரதப்போர் *
எல்லாச்சேனையும் இருநிலத்தவித்தவெந்தாய்! *
பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா *
சொல்லாய்யானுன்னைச் சார்வதோர்சூழ்ச்சியே.
3027 சூழ்ச்சிஞானச் சுடரொளியாகி * என்றும்
ஏழ்ச்சிக்கேடின்றி எங்கணும்நிறைந்தவெந்தாய்! *
தாழ்ச்சிமற்றெங்கும்தவிர்ந்து நின்தாளிணக்கீழ்
வாழ்ச்சி * யான்சேரும்வகை அருளாய்வந்தே.
3028 வந்தாய்போலேவந்தும் என்மனத்தினைநீ *
சிந்தாமற்செய்யாய் இதுவேஇதுவாகில் *
கொந்தார்க்காயாவின் கொழுமலர்த்திருநிறத்த
எந்தாய் * யான்உன்னை எங்குவந்தணுகிற்பனே?
3029 கிற்பன்கில்லேனென்றிலன் முனநாளால் *
அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன் *
பற்பல்லாயிரம் உயிர்செய்தபரமா! * நின்
நற்பொற்சோதித்தாள் நணுகுவதெஞ்ஞான்றே?
3030 எஞ்ஞான்றுநாமிருந்திருந்து இரங்கிநெஞ்சே! *
மெய்ஞ்ஞானமின்றி வினையியல்பிறப்பழுந்தி *
எஞ்ஞான்றுமெங்கும் ஒழிவறநிறைந்துநின்ற *
மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனைமேவுதுமே?
3031 மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன் *
ஓவுதலின்றி உன்கழல்வணங்கிற்றிலேன் *
பாவுதொல்சீர்க்கண்ணா! என்பரஞ்சுடரே! *
கூவுகின்றேன்காண்பான் எங்கெய்தக்கூவுவனே?
3032 கூவிக்கூவிக் கொடுவினைத்தூற்றுள்நின்று *
பாவியேன்பலகாலம் வழிதிகைத்தலமர்கின்றேன் *
மேவியன்றாநிரைகாத்தவன் உலகமெல்லாம்
தாவியவம்மானை * எங்கினித்தலைப்பெய்வனே?
3033 தலைப்பெய்காலம் நமன்தமர்பாசம்விட்டால் *
அலைப்பூணுண்ணும் அவ்வல்லலெல்லாமகல *
கலைப்பல்ஞானத்து என்கண்ணனைக்கண்டுகொண்டு *
நிலைப்பெற்றென்னெஞ்சம்பெற்றது நீடுயிரே.
3034 உயிர்களெல்லாவுலகமுமுடையவனை *
குயில்கொள்சோலைத் தென்குருகூர்ச்சடகோபன் *
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துள்இப்பத்தும் *
உயிரின்மேலாக்கை ஊனிடையொழிவிக்குமே. (2)