Your browser does not support the audio element.
audio
3013 முடிச்சோதியாய் உனதுமுகச்சோதிமலந்ததுவோ? *
அடிச்சோதிநீநின்ற தாமரையாயலர்ந்ததுவோ? *
படிச்சோதியாடையொடும் பல்கலனாய் * நின்பைம்பொன்
கடிச்சோதிகலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே. (2)
3014 கட்டுரைக்கில்தாமரை நின்கண்பாதம்கையொவ்வா *
சுட்டுரைத்தநன்பொன் உன்திருமேனியொளி யொவ்வாது *
ஒட்டுரைத்திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் *
பட்டுரையாய்ப்புற்கென்றே காட்டுமால்பரஞ்சோதீ!
3015 பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்துபின் * மற்றோர்
பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற *
பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த * எம்
பரஞ்சோதி! கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே.
3016 மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் * நின்
மாட்டாயமலர்புரையும் திருவுருவும்மனம்வைக்க *
மாட்டாதபலசமய மதிகொடுத்தாய் * மலர்த்துழாய்
மாட்டேநீமனம் வைத்தாய் மாஞாலம்வருந்தாதே.
3017 வருந்தாதவருந்தவத்த மலர் கதிரின்சுடருடம்பாய் *
வருந்தாதஞானமாய் வரம்பின்றிமுழுதியன்றாய்! *
வருங்காலம்நிகழ்காலம் கழிகாலமாய் * உலகை
ஒருங்காகஅளிப்பாய்! சீர் எங்குஉலக்கஓதுவனே?
3018 ஓதுவாரோத்தெல்லாம் எவ்வுலகத்தெவ்வெவையும் *
சாதுவாய்நின்புகழின் தகையல்லால்பிறிதில்லை *
போதுவாழ்புனந்துழாய் முடியினாய்! * பூவின்மேல்
மாதுவாழ்மார்ப்பினாய்! என்சொல்லியான்வாழ்த்துவனே?
3019 வாழ்த்துவார்பலராக நின்னுள்ளேநான்முகனை *
மூழ்த்தநீருலகெல்லாம் படையென்றுமுதல்படைத்தாய்! *
கேழ்த்தசீரரன்முதலாக் கிளர்தெய்வமாய்க்கிளர்ந்து *
சூழ்த்தமரர்துதித்தாலுன் தொல்புகழ்மாசூணாதே?
3020 மாசூணாச்சுடருடம்பாய் மலராதுகுவியாது *
மாசூணாஞானமாய் முழுதுமாய்முழுதியன்றாய்! *
மாசூணாவான்கோலத்து அமரர்கோன்வழிபட்டால் *
மாசூணாவுனபாதமலர்ச்சோதிமழுங்காதே.
3021 மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய் *
தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே *
மழுங்காதஞானமே படையாக * மலருலகில்
தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதி மறையாதே?
3022 மறையாயநால்வேதத்துள்நின்ற மலர்சுடரே! *
முறையாலிவ்வுலகெல்லாம் படைத்திடந்துண்டு மிழ்ந்தளந்தாய்! *
பிறையேறுசடையானும் நான்முகனுமிந்திரனும் *
இறையாதலறிந்தேத்த வீற்றிருத்தலிதுவியப்பே.
3023 வியப்பாயவியப்பில்லா மெய்ஞ்ஞானவேதியனை *
சயப்புகழார்பலர்வாழும் தடங்குருகூர்ச்சடகோபன் *
துயக்கின்றித்தொழுதுரைத்த ஆயிரத்துள்இப்பத்தும் *
உயக்கொண்டுபிறப்பறுக்கும் ஒலிமுந்நீர்ஞாலத்தே. (2)