1575 இனிஎப்பாவம்வந்தெய்தும்? சொல்லீர்
எமக்குஇம்மையேஅருள்பெற்றமையால் * அடும்
துனியைத்தீர்த்து இன்பமேதருகின்றதோர்
தோற்றத்தொன்னெறியை * வையம்தொழப்படும்
முனியைவானவரால்வணங்கப்படும்
முத்தினைப் பத்தர்தாம்நுகர்கின்றதுஓர்
கனியை * காதல்செய்துஎன்னுள்ளம்கொண்ட
கள்வனை இன்றுகண்டுகொண்டேனே.