Your browser does not support the audio element.
audio
1558 புள்ளாய்ஏனமுமாய்ப் புகுந்து * என்னையுள்ளங்கொண்ட
கள்வா! என்றலும் என்கண்கள்நீர்கள்சோர்தருமால் *
உள்ளேநின்றுருகி நெஞ்சம்உன்னையுள்ளியக்கால் *
நள்ளேன்உன்னையல்லால் நறையூர்நின்றநம்பீயோ! (2)
1559 ஓடாவாளரியின் உருவாய்மருவி * என்றன்
மாடேவந்து அடியேன்மனங்கொள்ளவல்லமைந்தா! *
பாடேன்தொண்டர்தம்மைக் கவிதைப்பனுவல்கொண்டு *
நாடேன்உன்னையல்லால் நறையூர்நின்றநம்பீயோ!
1560 எம்மானும்எம்மனையும் என்னைப்பெற்றொழிந்ததற்பின் *
அம்மானும்அம்மனையும் அடியேனுக்காகிநின்ற *
நன்மானவொண்சுடரே! நறையூர்நின்றநம்பீ! * உன்
மைம்மானவண்ணமல்லால் மகிழ்ந்துஏத்தமாட்டேனே.
1561 சிறியாய்ஓர்பிள்ளையுமாய் உலகுண்டுஓராலிலைமேல்
உறைவாய்! * என்நெஞ்சினுள்ளேஉறைவாய் உறைந்ததுதான் *
அறியாதிருந்துஅறியேன் அடியேன், அணிவண்டுகிண்டும் *
நறைவாரும்பொழில்சூழ் நறையூர்நின்றநம்பீயோ!
1562 நீண்டாயைவானவர்கள் நினைந்துஏத்திக்காண்பரிதால் *
ஆண்டாயென்றுஆதரிக்கப்படுவாய்க்கு நான்அடிமை *
பூண்டேன் * என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் *
நாண்தான்உனக்கொழிந்தேன் நறையூர்நின்றநம்பீயோ!
1563 எந்தாதைதாதை அப்பால்எழுவர்பழவடிமை
வந்தார் * என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன் *
அந்தோ! என்னாருயிரே! அரசே!அருளெனக்கு *
நந்தாமல்தந்தஎந்தாய்! நறையூர்நின்றநம்பீயோ!
1564 மன்னஞ்ச ஆயிரந்தோள்மழுவில்துணித்தமைந்தா! *
என்னெஞ்சத்துள்ளிருந்து இங்குஇனிப்போய்ப்பிறரொருவர் *
வன்னெஞ்சம்புக்கிருக்கவொட்டேன் வளைத்துவைத்தேன் *
நன்னெஞ்சவன்னம்மன்னும் நறையூர்நின்றநம்பீயோ!
1565 எப்போதும்பொன்மலரிட்டு இமையோர்தொழுது * தங்கள்
கைப்போதுகொண்டுஇறைஞ்சிக் கழல்மேல்வணங்க நின்றாய் *
இப்போதுஎன்னெஞ்சினுள்ளே புகுந்தாயைப்போகலொட்டேன் *
நற்போதுவண்டுகிண்டும் நறையூர்நின்றநம்பீயோ!
1566 ஊனேராக்கைதன்னை உழந்தோம்பிவைத்தமையால் *
யானாய்என்தனக்காய் அடியேன்மனம்புகுந்த
தேனே! * தீங்கரும்பின்தெளிவே! என் சிந்தைதன்னால் *
நானேஎய்தப்பெற்றேன் நறையூர்நின்றநம்பீயோ!
1567 நன்னீர்வயல்புடைசூழ் நறையூர்நின்றநம்பியை *
கன்னீரமால்வரைத்தோள் கலிகன்றிமங்கையர்கோன் *
சொன்னீரசொல்மாலை சொல்லுவார்கள் * சூழ்விசும்பில்
நன்னீர்மையால்மகிழ்ந்து நெடுங்காலம்வாழ்வாரே (2)