Your browser does not support the audio element.
audio
2002 மைந்நின்றகருங்கடல்வாயுலகின்றி
வானவரும்யாமுமெல்லாம் *
நெய்ந்நின்றசக்கரத்தன்திருவயிற்றில்
நெடுங்காலம்கிடந்ததுஓரீர் *
எந்நன்றிசெய்தாரா
ஏதிலோர்தெய்வத்தைஏத்துகின்றீர்? *
செய்ந்நன்றிகுன்றேன்மின்
தொண்டர்காள்! அண்டனையேஏத்தீர்களே. (2)
2003 நில்லாதபெருவெள்ளம்
நெடுவிசும்பின்மீதோடிநிமிர்ந்தகாலம் *
மல்லாண்டதடக்கையால்
பகிரண்டமகப்படுத்தகாலத்து * அன்று
எல்லாரும்அறியாரோ?
எம்பெருமான்உண்டுமிழ்ந்தஎச்சில்தேவர் *
அல்லாதார்தாமுளரே?
அவனருளேஉலகாவதுஅறியீர்களே?
2004 நெற்றிமேல்கண்ணானும்நிறைமொழிவாய்நான்முகனும்
நீண்டநால்வாய் *
ஒற்றைக்கைவெண்பகட்டினொருவனையும்
உள்ளிட்டஅமரரோடும் *
வெற்றிப்போர்க்கடலரையன்விழுங்காமல்
தான்விழுங்கிஉய்யக்கொண்ட *
கொற்றப்போராழியான்குணம்பரவாச்சிறுதொண்டர்
கொடியவாறே!
2005 பனிப்பரவைத்திரைததும்பப்
பாரெல்லாம்நெடுங்கடலேயானகாலம் *
இனிக்களைகணிவர்க்கில்லையென்று
உலகமேழினையும்ஊழில்வாங்கி *
முனித்தலைவன், முழங்கொளிசேர்திருவயிற்றில் வைத்து
உம்மையுய்யக்கொண்ட *
கனிகளவத்திருவுருவத்தொருவனையே
கழல்தொழுமாகல்லீர்களே.
2006 பாராரும்காணாமே
பரவைமாநெடுங்கடலேயானகாலம் *
ஆரானும்அவனுடையதிருவயிற்றில்
நெடுங்காலம்கிடந்தது * உள்ளத்
தோராதவுணர்விலீர்! உணருதிரேல்,
உலகளந்தஉம்பர்கோமான் *
பேராளன்பேரான
பேர்களாயிரங்களுமேபேசீர்களே.
2007 பேயிருக்கும்நெடுவெள்ளம்
பெருவிசும்பின்மீதோடிப்பெருகுகாலம் *
தாயிருக்கும்வண்ணமே
உம்மைத்தன்வயிற்றிருத்திஉய்யக்கொண்டான் *
போயிருக்க, மற்றிங்கோர்புதுத்தெய்வம்
கொண்டாடும்தொண்டீர்! * பெற்ற
தாயிருக்கமணைவெந்நீராட்டுதிரோ?
மாட்டாததகவற்றீரே.
2008 மண்ணாடும்விண்ணாடும்
வானவரும்தானவரும்மற்றுமெல்லாம் *
உண்ணாதபெருவெள்ளம்
உண்ணாமல்தான்விழுங்கிஉய்யக்கொண்ட *
கண்ணாளன்கண்ணமங்கைநகராளன்
கழல்சூடி * அவனைஉள்ளத்து
எண்ணாதமானிடத்தை
எண்ணாதபோதெல்லாம் இனியவாறே.
2009 மறம்கிளர்ந்துகருங்கடல்நீர்
உரம்துரந்துபரந்தேறிஅண்டத்தப்பால் *
புறம்கிளர்ந்தகாலத்துப்
பொன்னுலகமேழினையும் ஊழில்வாங்கி *
அறம்கிளர்ந்ததிருவயிற்றின்
அகம்படியில்வைத்துஉம்மைஉய்யக்கொண்ட *
நிறம்கிளர்ந்தகருஞ்சோதிநெடுந்தகையை
நினையாதார்நீசர்தாமே.
2010 அண்டத்தின்முகடழுந்த
அலைமுந்நீர்த்திரைததும்ப ஆ! ஆ! வென்று *
தொண்டர்க்கும்அமரர்க்கும்
முனிவர்க்கும்தானருளி * உலகமேழும்
உண்டொத்ததிருவயிற்றின்
கொண்டற்கைமணிவண்ணன்
தண்குடந்தைநகர்ப்பாடியாடீர்களே.
2011 தேவரையும்அசுரரையும்
திசைகளையும்கடல்களையும்மற்றும்முற்றும் *
யாவரையும்ஒழியாமே
எம்பெருமானுண்டுமிழ்ந்ததறிந்துசொன்ன *
காவளரும்பொழில்மங்கைக்
கலிகன்றியொலிமாலைகற்றுவல்லார் *
பூவளரும்திருமகளால்அருள்பெற்றுப்
பொன்னுலகிற்பொலிவர்தாமே (2)