Chapter 9

Establishing the Supremacy - (எம் மா)

புருஷார்த்த நிர்ணயம்
“Bhagavān! I do not want anything for myself. I only desire to have what Your heart desires. I am not worried whether you give me moksham, kaivalyam (eternal self enjoyment), hell or heaven, destruction of ātmā and this body at the time of death. I want what You think is suitable” prays Āzhvār. These hymns elaborate on purushārtham amongst the Tatvahita purushārthās.
பகவானே! எனக்கென்று எதுவும் வேண்டா. உன் திருவுள்ளத்திற்கு விருப்பமானதே எனக்கு வேண்டும். மோக்ஷமோ, கைவல்யமோ, சுவர்க்கமோ, நரகமோ, இறக்கும் போது உடல் மற்றும் ஆத்ம நாசமோ நீ எது கொடுத்தாலும் எனக்குக் கவலை இல்லை. உன் விருப்பத்திற்கு ஏற்றதே எனக்கு வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திக்கிறார். + Read more
Verses: 2991 to 3001
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: முதிர்ந்த குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: will reach moksha where there is no suffering
  • TVM 2.9.1
    2991 ## எம் மா வீட்டுத் * திறமும் செப்பம் * நின்
    செம் மா பாத பற்புத் * தலை சேர்த்து ** ஒல்லை
    கைம்மா துன்பம் * கடிந்த பிரானே *
    அம்மா அடியேன் * வேண்டுவது ஈதே (1)
  • TVM 2.9.2
    2992 ஈதே யான் உன்னைக் * கொள்வது எஞ்ஞான்றும் * என்
    மை தோய் சோதி * மணிவண்ண எந்தாய் **
    எய்தா நின் கழல் * யான் எய்த * ஞானக்
    கை தா * காலக் கழிவு செய்யேலே (2)
  • TVM 2.9.3
    2993 செய்யேல் தீவினை என்று * அருள் செய்யும் * என்
    கை ஆர் சக்கரக் * கண்ண பிரானே **
    ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் * நின் கழல்
    எய்யாது ஏத்த * அருள்செய் எனக்கே (3)
  • TVM 2.9.4
    2994 எனக்கே ஆட்செய் * எக் காலத்தும் என்று * என்
    மனக்கே வந்து * இடைவீடு இன்றி மன்னி **
    தனக்கே ஆக * எனைக் கொள்ளும் ஈதே *
    எனக்கே கண்ணனை * யான் கொள் சிறப்பே (4)
  • TVM 2.9.5
    2995 சிறப்பில் வீடு * சுவர்க்கம் நரகம் *
    இறப்பில் எய்துக * எய்தற்க ** யானும்
    பிறப்பு இல் பல் * பிறவிப் பெருமானை *
    மறப்பு ஒன்று இன்றி * என்றும் மகிழ்வனே (5)
  • TVM 2.9.6
    2996 மகிழ் கொள் தெய்வம் * உலோகம் அலோகம் *
    மகிழ் கொள் சோதி * மலர்ந்த அம்மானே **
    மகிழ் கொள் சிந்தை * சொல் செய்கை கொண்டு * என்றும்
    மகிழ்வுற்று * உன்னை வணங்க வாராயே (6)
  • TVM 2.9.7
    2997 வாராய் * உன் திருப் பாத மலர்க்கீழ் *
    பேராதே யான் வந்து ** அடையும்படி
    தாராதாய் * உன்னை என்னுள் * வைப்பில் என்றும்
    ஆராதாய் * எனக்கு என்றும் எக்காலே (7)
  • TVM 2.9.8
    2998 எக்காலத்து எந்தையாய் * என்னுள் மன்னில் * மற்று
    எக் காலத்திலும் * யாதொன்றும் வேண்டேன் **
    மிக்கார் வேத * விமலர் விழுங்கும் * என்
    அக்காரக் கனியே * உன்னை யானே (8)
  • TVM 2.9.9
    2999 யானே என்னை * அறியகிலாதே *
    யானே என் தனதே * என்று இருந்தேன் **
    யானே நீ * என் உடைமையும் நீயே *
    வானே ஏத்தும் * எம் வானவர் ஏறே (9)
  • TVM 2.9.10
    3000 ஏறேல் ஏழும் * வென்று ஏர் கொள் இலங்கையை *
    நீறே செய்த * நெடுஞ் சுடர்ச் சோதி **
    தேறேல் என்னை * உன் பொன் அடிச் சேர்த்து * ஒல்லை
    வேறே போக * எஞ்ஞான்றும் விடலே (10)
  • TVM 2.9.11
    3001 ## விடல் இல் சக்கரத்து * அண்ணலை மேவல் *
    விடல் இல் வண் குருகூர்ச் ** சடகோபன் சொல்
    கெடல் இல் ஆயிரத்துள் * இவை பத்தும்
    கெடல் இல் வீடு செய்யும் * கிளர்வார்க்கே (11)