Your browser does not support the audio element.
audio
3871 சூழ்விசும்பணிமுகில் தூரியம்முழக்கின *
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின *
ஏழ்பொழிலும் வளமேந்தியஎன்னப்பன் *
வாழ்புகழ்நாரணன்தமரைக் கண்டுகந்தே. (2)
3872 நாரணன்தமரைக்கண்டுகந்து நல்நீர்முகில் *
பூரணபொற்குடம் பூரித்ததுஉயர்விண்ணில் *
நீரணிகடல்கள் நின்றார்த்தன * நெடுவரைத்
தோரணம்நிரைத்து எங்கும்தொழுதனருலகே.
3873 தொழுதனருலகர்கள் தூபநல்மலர்மழை
பொழிவனர் * பூழியன்றளந்தவன்தமர்முன்னே *
எழுமினென்று இருமருங்கிசைத்தனர்முனிவர்கள் *
வழியிதுவைகுந்தற்குஎன்று வந்தெதிரே.
3874 எதிரெதிரிமையவர் இருப்பிடம்வகுத்தனர் *
கதிரவரவரவர் கைந்நிரைகாட்டினர் *
அதிர்குரல்முரசங்கள் அலைகடல்முழக்கொத்த *
மதுவிரிதுழாய்முடி மாதவன்தமர்க்கே.
3875 மாதவன்தமரென்று வாசலில்வானவர் *
போதுமினெமதிடம் புகுதுகவென்றலும் *
கீதங்கள்பாடினர் கின்னரர்கெருடர்கள் *
வேதநல்வாயவர் வேள்வியுள்மடுத்தே.
3876 வேள்வியுள்மடுத்தலும் விரைகமழ்நறும்புகை *
காளங்கள்வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர் *
ஆண்மிங்கள்வானகம் ஆழியான்தமரென்று *
வாளொண்கண்மடந்தையர் வாழ்த்தினர்மகிழ்ந்தே.
3877 மடந்தையர்வாழ்த்தலும் மருதரும்வசுக்களும் *
தொடர்ந்தெங்கும் தோத்திரஞ்சொல்லினர் * தொடுகடல்
கிடந்தவென்கேசவன் கிளரொளிமணிமுடி *
குடந்தையென்கோவலன் குடியடியார்க்கே.
3878 குடியடியாரிவர் கோவிந்தன்தனக்கென்று *
முடியுடைவானவர் முறைமுறையெதிர்கொள்ள *
கொடியணிநெடுமதிள் கோபுரம்குறுகினர் *
வடிவுடைமாதவன் வைகுந்தம்புகவே.
3879 வைகுந்தம்புகுதலும் வாசலில்வானவர் *
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று *
வைகுந்தத்தமரரும் முனிவரும்வியந்தனர் *
வைகுந்தம்புகுவது மண்ணவர்விதியே.
3880 விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர் *
பதியினில்பாங்கினில் பாதங்கள்கழுவினர் *
நிதியுநற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் *
மதிமுகமடந்தையர் ஏந்தினர்வந்தே.
3881 வந்தவரெதிர்கொள்ள மாமணிமண்டபத்து *
அந்தமில்பேரின்பத்து அடியரோடிருந்தமை *
கொந்தலர்பொழில் குருகூர்ச்சடகோபன் * சொல்
சந்தங்களாயிரத்து இவைவல்லார்முனிவரே. (2)