Your browser does not support the audio element.
audio
1108 திவளும்வெண்மதிபோல் திருமுகத்தரிவை
செழுங்கடலமுதினிற்பிறந்த
அவளும் * நின்னாகத் திருப்பதும்அறிந்தும்
ஆகிலும்ஆசைவிடாளால் *
குவளையங்கண்ணிகொல்லியம்பாவை
சொல்லுநின்தாள்நயந்திருந்த
இவளை * உன்மனத்தால்என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே! (2)
1109 துளம்படுமுறுவல் தோழியர்க்குஅருளாள்
துணைமுலைசாந்துகொண்டுஅணியாள் *
குளம்படுகுவளைக் கண்ணிணைஎழுதாள்
கோலநன்மலர்குழற்குஅணியாள் *
வளம்படுமுந்நீர்வையமுன்னளந்த *
மாலென்னும், மாலினமொழியாள் *
இளம்படியிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!
1110 சாந்தமும்பூணும் சந்தனக்குழம்பும்
தடமுலைக்குஅணியிலும்தழலாம் *
போந்தவெண்திங்கள்கதிர்சுடமெலியும்
பொருகடல்புலம்பிலும்புலம்பும் *
மாந்தளிர்மேனிவண்ணமும் பொன்னாம்
வளைகளும்இறைநில்லா * என்தன்
ஏந்திழையிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
1111 ஊழியின்பெரிதால்நாழிகையென்னும்
ஒண்சுடர்துயின்றதால்லென்னும் *
ஆழியும்புலம்பும் அன்றிலும்உறங்கா
தென்றலும்தீயினிற்கொடிதாம் *
தோழியோ! என்னும்துணைமுலைஅரக்கும்
சொல்லுமின்என்செய்கேன்? என்னும் *
ஏழையென்பொன்னுக்கு என்நினைந்திருந்தாய்?
1112 ஓதிலும்உன்பேரன்றிமற்றோதாள்
உருகும்நின்திருவுருநினைந்து *
காதன்மைபெரிது கையறவுடையள்
கயல்நெடுங்கண்துயில்மறந்தாள் *
பேதையேன்பேதை பிள்ளைமைபெரிது
தெள்ளியள்வள்ளிநுண்மருங்குல் *
ஏதலர் முன்னாஎன்நினைந்திருந்தாய்?
1113 தன்குடிக்குஏதும் தக்கவாநினையாள்
தடங்கடல்நுடங்கெயிலிலங்கை *
வன்குடிமடங்கவாளமர்தொலைத்த
வார்த்தைகேட்டு இன்புறும்மயங்கும் *
மின்கொடிமருங்குல் சுருங்கமேல்நெருங்கி
மென்முலைபொன்பயந்திருந்த *
என்கொடியிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
1114 உளங்கனிந்திருக்கும் உன்னையேபிதற்றும்
உனக்கன்றிஎனக்குஅன்பொன்றிலளால் *
வளங்கனிபொழில்சூழ் மாலிருஞ்சோலை
மாயனே! என்றுவாய்வெருவும் *
களங்கனிமுறுவல் காரிகைபெரிது
கவலையோடுஅவலம்சேர்ந்திருந்த *
இளங்கனியிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
1115 அலங்கெழுதடக்கை ஆயன்வாயாம்பற்கு
அழியுமால்என்னுள்ளம்என்னும் *
புலங்கெழுபொருநீர்ப்புட்குழிபாடும்
போதுமோநீர்மலைக்கு? என்னும் *
குலங்கெழுகொல்லி கோமளவல்லி
கொடியிடைநெடுமழைக்கண்ணி *
இலங்கெழில்தோளிக்கு என்நினைந்திருந்தாய்?
1116 பொன்குலாம்பயலை பூத்தனமென்தோள்
பொருகயற்கண்துயில்மறந்தாள் *
அன்பினால்உன்மேல் ஆதரம்பெரிது
இவ்வணங்கினுக்குஉற்றநோய்அறியேன் *
மின்குலாமருங்குல்சுருங்கமேல்நெருங்கி
வீங்கியவனமுலையாளுக்கு *
என்கொலாம்? குறிப்பில் என்நினைந்திருந்தாய்?
1117 அன்னமும்மீனும் ஆமையும்அரியும்
ஆயஎம்மாயனே! அருளாய் *
என்னும்இன்தொண்டர்க்கு இன்னருள்புரியும்
இடவெந்தை எந்தைபிரானை *
மன்னுமாமாடமங்கையர்தலைவன்
மானவேல்கலியன்வாயொலிகள் *
பன்னியபனுவல்பாடுவார் நாளும்
பழவினைபற்றறுப்பாரே. (2)