Chapter 10

Lord Rama of Thillai Chitrakudam - (அங்கண் நெடு)

தில்லைச் சித்திரகூடம். இராம சரிதம்
Lord Rama of Thillai Chitrakudam - (அங்கண் நெடு)
Introduction & Details
Recitation
Translation

PMT 10.1

741 அங்கணெடுமதிள்புடைசூழயோத்தியென்னும்

அணிநகரத்துலகனைத்தும்விளக்கும்சோதி *

வெங்கதிரோன்குலத்துக்கோர்விளக்காய்த்தோன்றி

விண்முழுதுமுயக்கொண்டவீரன் தன்னை *

செங்கணெடுங்கருமுகிலையிராமன் தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எங்கள்தனிமுதல்வனையெம்பெருமான்தன்னை

என்றுகொலோ? கண்குளிரக்காணும்நாளே. (2)

PMT 10.3

743 செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச்

சினவிடையோன்சிலையிறுத்து மழுவாளேந்தி *

வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு

வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை *

தெவ்வரஞ்சநெடும்புரிசையுயர்ந்தபாங்கர்த்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எவ்வரிவெஞ்சிலைத் தடக்கையிராமன்தன்னை

இறைஞ்சுவாரிணையடியேயிறைஞ்சினேனே.

PMT 10.4

744 தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால் *

தொன்னகரந்துறந்து * துறைக்கங்கைதன்னை

பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்

பரதனுக்குபாதுகமுமரசுமீந்து *

சித்திரகூடத்திருந்தான்றன்னை இன்று *

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற

இருநிலத்தார்க்கு இமையவர்நேரொவ்வார்தாமே.

PMT 10.5

745 வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று

வண்டமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி *

கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்

கரனோடுதூடணன்றன்னுயிரைவாங்கி *

சிலைவணக்கிமான்மரியவெய்தான்தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

தலைவணக்கிக்கைகூப்பியேத்தவல்லார்

திரிதலால் தவமுடைத்துத்தரணிதானே.

PMT 10.8

748 அம்பொனெடுமணிமாடஅயோத்தியெய்தி

அரசெய்திஅகத்தியன்வாய்த்தான்முன்கொன்றான்

தன் * பெருந்தொல்கதைக்கேட்டுமிதிலைச்செல்வி

உலகுய்யத்திருவயிறுவாய்த்தமக்கள் *

செம்பவளத்திரள்வாய்த்தன்சரிதைகேட்டான்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எம்பெருமான்தன்சரிதைசெவியால்கண்ணால்

பருகுவோம் * இன்னமுதைம்மதியோமின்றே.

PMT 10.9

749 செறிதவச்சம்புகன்றன்னைச்சென்றுகொன்று

செழுமறையோனுயிர்மீட்டுத் * தவத்தோனீந்த

நிறைமணிப்பூணணியுங்கொண்டுஇலவணன்தன்னைத்

தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட *

திறல்விளங்குமிலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்

உறைவானை * மறவாதவுள்ளந்தன்னை

உடையோம் * மற்றுறுதுயர மடையோமின்றே.

PMT 10.10

750 அன்றுசராசரங்களைவைகுந்தத்தேற்றி

அடலரவப்பகையேறியசுரர் தம்மை

வென்று * இலங்குமணிநெடுந்தோள்நான்கும்தோன்ற

விண்முழுதுமெதிர்வரத்தன்தாமம்மேவி *

சென்றினிதுவீற்றிருந்தவம்மான்தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

என்றும்நின்றானவனிவனென்றேத்தி நாளும்

இன்றைஞ்சுமினோஎப்பொழுதும்தொண்டீர்! நீரே. (2)

PMT 10.11

751 தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்

திறல்விளங்குமாருதியோடமர்ந்தான்தன்னை *

எல்லையில்சீர்த்தயரதன்றன்மகனாய்த்தோன்றிற்று

அதுமுதலாத் தன்னுலகம்புக்கதீறா *

கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்

கோழியர்கோன்குடைக்குலசேகரஞ்சொற்செய்த *

நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்

நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)