Your browser does not support the audio element.
audio
1768 தன்னைநைவிக்கிலேன் வல்வினையேன்தொழுதும்எழு *
பொன்னைநைவிக்கும் அப்பூஞ்செருந்திமணநீழல்வாய் *
என்னைநைவித்து எழில்கொண்டகன்றபெருமானிடம் *
புன்னைமுத்தம்பொழில்சூழ்ந்து அழகாயபுல்லாணியே. (2)
1769 உருகிநெஞ்சே! நினைந்துஇங்குஇருந்தென்? தொழுதும்எழு *
முருகுவண்டுண்மலர்க்கைதையின் நீழலில்முன்னொருநாள் *
பெருகுகாதன்மை என்னுள்ளமெய்தப்பிரிந்தானிடம் *
பொருதுமுந்நீர்க்கரைக்கே மணியுந்துபுல்லாணியே.
1770 ஏதுசெய்தால்மறக்கேன்? மனமே! தொழுதும்எழு *
தாதுமல்குதடம்சூழ்பொழில் தாழ்வர்தொடர்ந்து * பின்
பேதை நினைப்பிரியேன் இனிஎன்று அகன்றானிடம் *
போதுநாளும்கமழும் பொழில்சூழ்ந்தபுல்லாணியே.
1771 கொங்குண்வண்டேகரியாகவந்தான் கொடியேற்கு * முன்
நங்களீசன் நமக்கேபணித்தமொழிசெய்திலன் *
மங்கைநல்லாய்! தொழுதும்எழு போய்அவன்மன்னுமூர் *
பொங்குமுந்நீர்க்கரைக்கே மணியுந்துபுல்லாணியே.
1772 உணரில்உள்ளம்சுடுமால் வினையேன்தொழுதும்எழு *
துணரிஞாழல்நறும்போது நம்சூழ்குழல்பெய்து * பின்
தணரில்ஆவிதளருமென அன்புதந்தானிடம் *
புணரியோதம்பணிலம் மணியுந்துபுல்லாணியே.
1773 எள்கிநெஞ்சே! நினைந்திங்கிருந்தென்? தொழுதும்எழு *
வள்ளல்மாயன்மணிவண்ணன்எம்மான் மருவுமிடம் *
கள்ளவிழும்மலர்க்காவியும் தூமடற்கைதையும் *
புள்ளும்அள்ளல்பழனங்களும்சூழ்ந்த புல்லாணியே.
1774 பரவிநெஞ்சே! தொழுதும்எழு போய்அவன்பாலமாய் *
இரவும்நாளும் இனிக்கண்துயிலாதிருந்துஎன்பயன்? *
விரவிமுத்தம் நெடுவெண்மணல்மேற்கொண்டு * வெண்திரை
புரவியென்னப்புதம்செய்து வந்துந்துபுல்லாணியே.
1775 அலமும்ஆழிப்படையும்உடையார் நமக்குஅன்பராய் *
சலமதாகித்தகவொன்றிலர் நாம்தொழுதும்எழு *
உலவுகால்நற்கழியோங்கு தண்பைம்பொழிலூடு * இசை
புலவுகானல் களிவண்டினம்பாடுபுல்லாணியே.
1776 ஓதிநாமம்குளித்துஉச்சிதன்னால் ஒளிமாமலர் *
பாதம்நாளும்பணிவோம் நமக்கேநலமாதலின் *
ஆதுதாரானெனிலும்தரும் அன்றியுமன்பராய் *
போதும்மாதே! தொழுதும் அவன்மன்னுபுல்லாணியே.
1777 இலங்குமுத்தும்பவளக்கொழுந்தும் எழில்தாமரை *
புலங்கள்முற்றும்பொழில்சூழ்ந்து அழகாயபுல்லாணிமேல் *
கலங்கலில்லாப்புகழான் கலியனொலிமாலை *
வலங்கொள்தொண்டர்க்குஇடமாவது பாடில் வைகுந்தமே. (2)
1778 காவார்மடல்பெண்ணை அன்றிலரிகுரலும் *
ஏவாயினூடியங்கும் எஃகில்கொடிதாலோ! *
பூவார்மணம்கமழும் புல்லாணிகைதொழுதேன் *
பாவாய்! இதுநமக்கு ஓர்பான்மையேயாகாதே. (2)
1779 முன்னம்குறளுருவாய் மூவடிமண்கொண்டளந்த *
மன்னன்சரிதைக்கே மாலாகிப்பொன்பயந்தேன் *
பொன்னங்கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி *
அன்னமாய்நூல்பயந்தாற்கு ஆங்கிதனைச் செப்புமினே.
1780 வவ்வித்துழாயதன்மேல் சென்றதனிநெஞ்சம் *
செவ்வியறியாது நிற்குங்கொல்? நித்திலங்கள் *
பவ்வத்திரையுலவு புல்லாணிகைதொழுதேன் *
தெய்வச்சிலையாற்கு என்சிந்தைநோய்செப்புமினே.
1781 பரியஇரணியனதுஆகம் அணியுகிரால் *
அரியுருவாய்க்கீண்டான் அருள்தந்தவா! நமக்கு *
பொருதிரைகள்போந்துலவு புல்லாணிகைதொழுதேன் *
அரிமலர்க்கண்ணீர்ததும்ப அந்துகிலும்நில்லாவே.
1782 வில்லால்இலங்கைமலங்கச் சரம்துரந்த *
வல்லாளன்பின்போன நெஞ்சம்வருமளவும் *
எல்லாரும்என்தன்னை ஏசிலும்பேசிடினும் *
புல்லாணியெம்பெருமான் பொய்கேட்டிருந்தேனே.
1783 சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான் *
அழன்றுகொடிதாகி அஞ்சுடரில் தானடுமால் *
செழுந்தடம் பூஞ்சோலைசூழ் புல்லாணிகைதொழுதேன் *
இழந்திருந்தேன் என்தன் எழில்நிறமும் சங்குமே.
1784 கனையாரிடிகுரலின் கார்மணியின்நாவாடல் *
தினையேனும்நில்லாது தீயிற்கொடிதாலோ *
புனையார்மணிமாடப் புல்லாணிகைதொழுதேன் *
வினையேன்மேல்வேலையும் வெந்தழலேவீசுமே.
1785 தூம்புடைக்கைவேழம் வெருவமருப்பொசித்த *
பாம்பினணையான் அருள்தந்தவா! நமக்கு *
பூஞ்செருந்திபொன்சொரியும் புல்லாணிகைதொழுதேன் *
தேம்பலிளம்பிறையும் என்தனக்குஓர்வெந்தழலே.
1786 வேதமும்வேள்வியும் விண்ணும் இருசுடரும் *
ஆதியுமானான் அருள்தந்தவா! நமக்கு *
போதலரும்புன்னைசூழ் புல்லாணிகைதொழுதேன் *
ஓதமும்நானும் உறங்காதிருந்தேனே.
1787 பொன்னலரும்புன்னைசூழ் புல்லாணியம்மானை *
மின்னிடையார்வேட்கைநோய்கூர இருந்ததனை *
கன்னவிலும்திண்தோள் கலியனொலிவல்லார் *
மன்னவராய்மண்ணாண்டு வானாடுமுன்னுவரே. (2)
2782 மன்னும்மறைநான்குமானானை * புல்லாணித்
தென்னன்தமிழை வடமொழியை *
நாங்கூரில் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை *
நல்நீர்த்தலைச்சங்கநாண்மதியை * - நான்வணங்கும்
கண்ணனைக் கண்ணபுரத்தானை * தென்னறையூர்
மன்னுமணிமாடக் கோயில்மணாளனை *