Chapter 1

Sending messenger birds to the Lord of Thiru Vann vandur - (வைகல் பூங்)

திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல் (திருவண்வண்டூர்)
These divine hymns elaborate on how Āzhvār as lovelorn lady sends messengers/mediators to emperumAn (her Lover) residing in Thiru Vann vandur divyadesam with messages to explain Āzhvār’s despair and desperation. The messengers, the kurugu bird, stork/crane, the cuckoo (kuyil), the parrot, and the like, carry messages from the nayAki (Āzhvār) to her nayAkan (paramour, emperumAn).
ஆழ்வார் தம் நிலையைக் கூறுமாறு, திருவண்வண்டூர் என்னும் திவ்யதேசத்து எம்பெருமானிடம் குருகு, நாரை, கொக்கு, குயில், கிளி முதலியவற்றைத் தூது விடுதல். ஆழ்வாராகிய தலைவி எம்பிரானாகிய தலைவனிடம் தூது விடுதல்போல் இப்பகுதி அமைந்துள்ளது.

ஆறாம் பத்து-முதல் திருவாய்மொழி-“வைகல்”-பிரவேசம் –

முதல் + Read more
Verses: 3343 to 3353
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டராகம்
Timing: 12.00- 1.12 PM
Recital benefits: will be like Kama for women with waists thin as lightning
  • TVM 6.1.1
    3343 ## வைகல் பூங் கழிவாய் * வந்து மேயும் குருகினங்காள் *
    செய் கொள் செந்நெல் உயர் * திருவண்வண்டூர் உறையும் **
    கை கொள் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
    கைகள் கூப்பி சொல்லீர் * வினையாட்டியேன் காதன்மையே (1)
  • TVM 6.1.2
    3344 காதல் மென் பெடையோடு * உடன் மேயும் கரு நாராய் *
    வேத வேள்வி ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் **
    நாதன் ஞாலம் எல்லாம் உண்ட * நம் பெருமானைக் கண்டு *
    பாதம் கைதொழுது பணியீர் * அடியேன் திறமே (2)
  • TVM 6.1.3
    3345 திறங்கள் ஆகி எங்கும் * செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள் *
    சிறந்த செல்வம் மல்கு * திருவண்வண்டூர் உறையும் **
    கறங்கு சக்கரக் கைக் * கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
    இறங்கி நீர் தொழுது பணியீர் * அடியேன் இடரே (3)
  • TVM 6.1.4
    3346 இடர் இல் போகம் மூழ்கி * இணைந்து ஆடும் மட அன்னங்காள் *
    விடல் இல் வேத ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் **
    கடலின் மேனிப்பிரான் * கண்ணனை நெடுமாலைக் கண்டு *
    உடலம் நைந்து ஒருத்தி * உருகும் என்று உணர்த்துமினே (4)
  • TVM 6.1.5
    3347 உணர்த்தல் ஊடல் உணர்ந்து * உடன் மேயும் மட அன்னங்காள் *
    திணர்த்த வண்டல்கள்மேல் * சங்கு சேரும் திருவண்வண்டூர் **
    புணர்த்த பூந் தண் துழாய் முடி * நம் பெருமானைக் கண்டு *
    புணர்த்த கையினராய் * அடியேனுக்கும் போற்றுமினே (5)
  • TVM 6.1.6
    3348 போற்றி யான் இரந்தேன் * புன்னைமேல் உறை பூங் குயில்காள் *
    சேற்றில் வாளை துள்ளும் * திருவண்வண்டூர் உறையும் **
    ஆற்றல் ஆழி அங்கை * அமரர் பெருமானைக் கண்டு *
    மாற்றம் கொண்டருளீர் * மையல் தீர்வது ஒருவண்ணமே (6)
  • TVM 6.1.7
    3349 ஒருவண்ணம் சென்று புக்கு * எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே *
    செரு ஒண் பூம் பொழில் சூழ் * செக்கர் வேலைத் திருவண்வண்டூர் **
    கரு வண்ணம் செய்ய வாய் * செய்ய கண் செய்ய கை செய்ய கால் *
    செரு ஒண் சக்கரம் சங்கு * அடையாளம் திருந்தக் கண்டே (7)
  • TVM 6.1.8
    3350 திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் * ஒண் சிறு பூவாய் *
    செருந்தி ஞாழல் மகிழ் * புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் **
    பெரும் தண் தாமரைக்கண் * பெரு நீள் முடி நால் தடந்தோள் *
    கருந் திண் மா முகில் போல் * திருமேனி அடிகளையே (8)
  • TVM 6.1.9
    3351 அடிகள் கைதொழுது * அலர்மேல் அசையும் அன்னங்காள் *
    விடிவை சங்கு ஒலிக்கும் * திருவண்வண்டூர் உறையும் **
    கடிய மாயன் தன்னைக் * கண்ணனை நெடுமாலைக் கண்டு *
    கொடிய வல்வினையேன் * திறம் கூறுமின் வேறுகொண்டே (9)
  • TVM 6.1.10
    3352 வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் * வெறி வண்டினங்காள் *
    தேறு நீர்ப் பம்பை * வடபாலைத் திருவண்வண்டூர் **
    மாறு இல் போர் அரக்கன் * மதிள் நீறு எழச் செற்று உகந்த *
    ஏறு சேவகனார்க்கு * என்னையும் உளள் என்மின்களே (10)
  • TVM 6.1.11
    3353 ## மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் * அகல் ஞாலம் கொண்ட *
    வன் கள்வன் அடிமேல் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
    பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் * திருவண்வண்டூர்க்கு *
    இன்கொள் பாடல் வல்லார் * மதனர் மின்னிடை யவர்க்கே (11)