Your browser does not support the audio element.
audio
3321 மானேய்நோக்குநல்லீர்! வைகலும்வினையேன்மெலிய *
வானார்வண்கமுகும் மதுமல்லிகைகமழும் *
தேனார்சோலைகள்சூழ் திருவல்லவாழுறையும்
கோனாரை * அடியேன் அடிகூடுவதுஎன்றுகொலோ? (2)
3322 என்றுகொல்? தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? *
பொன்திகழ்புன்னைமகிழ் புதுமாதவிமீதணவி *
தென்றல்மணங்கமழும் திருவல்லவாழ்நகருள்
நின்றபிரான் * அடிநீறு அடியோங்கொண்டுசூடுவதே.
3323 சூடுமலர்க்குழலீர்! துயராட்டியேனைமெலிய *
பாடுநல்வேதவொலி பரவைத்திரைபோல்முழங்க *
மாடுயர்ந்தோமப்புகைகமழும் தண்திருவல்லவாழ் *
நீடுறைகின்றபிரான் கழல்காண்டுங்கொல்நிச்சலுமே.
3324 நிச்சலும்தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? *
பச்சிலைநீள்கமுகும் பலவும்தெங்கும்வாழைகளும் *
மச்சணிமாடங்கள்மீதணவும் தண்திருவல்லவாழ் *
நச்சரவினணைமேல் நம்பிரானதுநன்னலமே.
3325 நன்னலத்தோழிமீர்காள்! நல்லஅந்தணர்வேள்விப்புகை *
மைந்நலங்கொண்டுயர்விண்மறைக்கும் தண்திருவல்லவாழ் *
கன்னலங்கட்டிதன்னைக் கனியைஇன்னமுதந்தன்னை *
என்னலங்கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?
3326 காண்பதெஞ்ஞான்றுகொலொ? வினையேன்கனிவாய் மடவீர்! *
பாண்குரல்வண்டினொடு பசுந்தென்றலுமாகியெங்கும் *
சேண்சினையோங்குமரச் செழுங்கானல்திருவல்லவாழ் *
மாண்குறள்கோலப்பிரான் மலர்த்தாமரைப்பாதங்களே.
3327 பாதங்கள்மேலணி பூத்தொழக்கூடுங்கொல்? பாவை நல்லீர்! *
ஓதநெடுந்தடத்துள் உயர்தாமரைசெங்கழுநீர் *
மாதர்கள்வாண்முகமும் கண்ணுமேந்தும்திருவல்லவாழ் *
நாதனிஞ்ஞாலமுண்டநம்பிரான்தன்னைநாள்தொறுமே.
3328 நாள்தொறும்வீடின்றியே தொழக்கூடுங்கொல்? நன்னுதலீர்! *
ஆடுறுதீங்கரும்பும் விளைசெந்நெலுமாகியெங்கும் *
மாடுறுபூந்தடஞ்சேர் வயல்சூழ்தண்திருவல்லவாழ் *
நீடுறைகின்றபிரான் நிலந்தாவியநீள்கழலே.
3329 கழல்வளைபூரிப்பயாம்கண்டு கைதொழக்கூடுங்கொலோ? *
குழலென்னயாழுமென்னக் குளிர்சோலையுள்தேனருந்தி *
மழலைவரிவண்டுகளிசைபாடும் திருவல்லவாழ் *
சுழலின்மலிசக்கரப்பெருமானது தொல்லருளே.
3330 தொல்லருள்நல்வினையால்சொல்லக்கூடுங்கொல்? தோழிமீர்காள்! *
தொல்லருள்மண்ணும்விண்ணும் தொழநின்றதிருநகரம் *
நல்லருளாயிரவர் நலனேந்துந்திருவல்லவாழ் *
நல்லருள்நம்பெருமான் நாராயணன்நாமங்களே.
3331 நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் *
சேமங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த *
நாமங்களாயிரத்துள் இவைபத்தும்திருவல்லவாழ் *
சேமங்கொள்தென்னகர்மேல் செப்புவார்சிறந்தார் பிறந்தே. (2)