Chapter 7

Pleading the Lord to come and bless - (சீலம் இல்லா)

திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்

In this world, when a patient faints and loses consciousness, he/she does not feel the pain associated with the illness. Once the patient regains consciousness, he/she experiences all the terrible ill-effects associated with the illness. Unfortunately, Āzhvār is in the same state as the patient and laments his state in these divine hymns.


In his

+ Read more

உலகில் மயக்கமடைந்திருக்கும்போது நோயாளிக்கு நோயின் வலி தெரிவதில்லை. மயக்கம் நீங்கியபிறகு அவன் படாத பாடு படுவதுபோல் ஆயிற்று ஆழ்வாரின் நிலையும். அந்நிலையை ஈண்டு அவர் பாடுகிறார்.

நான்காம் பத்து -ஏழாந்திருவாய்மொழி – ‘சீலமில்லா’-பிரவேசம் –

வர்ஷேண பீஜம் பிரதி சஞ்ஜ ஹர்ஷ -காற்றாலும்

+ Read more
Verses: 3189 to 3199
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will go to Vaikuntam
  • TVM 4.7.1
    3189 ## சீலம் இல்லாச் சிறியனேலும் * செய்வினையோ பெரிதால் *
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி * நாராயணா என்று என்று **
    காலந்தோறும் யான் இருந்து * கைதலைபூசல் இட்டால் *
    கோல மேனி காண வாராய் * கூவியும் கொள்ளாயே (1)
  • TVM 4.7.2
    3190 கொள்ள மாளா இன்ப வெள்ளம் * கோது இல தந்திடும் * என்
    வள்ளலேயோ வையம் கொண்ட * வாமனாவோ என்று என்று **
    நள் இராவும் நன் பகலும் * நான் இருந்து ஓலம் இட்டால் *
    கள்ள மாயா உன்னை * என் கண் காண வந்து ஈயாயே (2)
  • TVM 4.7.3
    3191 ஈவு இலாத தீவினைகள் * எத்தனை செய்தனன்கொல்? *
    தாவி வையம் கொண்ட எந்தாய் * தாமோதரா என்று என்று **
    கூவிக் கூவி நெஞ்சு உருகி * கண்பனி சோர நின்றால் *
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய் * பாவியேன் காண வந்தே (3)
  • TVM 4.7.4
    3192 காண வந்து என் கண்முகப்பே * தாமரைக்கண் பிறழ *
    ஆணி செம்பொன் மேனி எந்தாய் * நின்று அருளாய் என்று என்று **
    நாணம் இல்லாச் சிறு தகையேன் * நான் இங்கு அலற்றுவது என் *
    பேணி வானோர் காணமாட்டாப் * பீடு உடை அப்பனையே? (4)
  • TVM 4.7.5
    3193 அப்பனே அடல் ஆழியானே * ஆழ் கடலைக் கடைந்த
    துப்பனே * உன் தோள்கள் நான்கும் * கண்டிடக் கூடுங்கொல்? என்று **
    எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு * ஆவி துவர்ந்து துவர்ந்து *
    இப்பொழுதே வந்திடாய் என்று * ஏழையேன் நோக்குவனே (5)
  • TVM 4.7.6
    3194 நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் * யான் எனது ஆவியுள்ளே *
    நாக்கு நீள்வன் ஞானம் இல்லை * நாள்தோறும் என்னுடைய **
    ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் * அல்ல புறத்தினுள்ளும் *
    நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்! * நின்னை அறிந்து அறிந்தே (6)
  • TVM 4.7.7
    3195 அறிந்து அறிந்து தேறித் தேறி * யான் எனது ஆவியுள்ளே *
    நிறைந்த ஞான மூர்த்தியாயை * நின்மலமாக வைத்து **
    பிறந்தும் செத்தும் நின்று இடறும் * பேதைமை தீர்ந்தொழிந்தேன் *
    நறுந் துழாயின் கண்ணி அம்மா * நான் உன்னைக் கண்டுகொண்டே (7)
  • TVM 4.7.8
    3196 கண்டு கொண்டு என் கைகள் ஆர * நின் திருப்பாதங்கள் மேல் *
    எண் திசையும் உள்ள பூக் கொண்டு * ஏத்தி உகந்து உகந்து **
    தொண்டரோங்கள் பாடி ஆடச் * சூழ் கடல் ஞாலத்துள்ளே *
    வண் துழாயின் கண்ணி வேந்தே * வந்திடகில்லாயே (8)
  • TVM 4.7.9
    3197 இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் * ஐம்புலன் வெல்ல கில்லேன் *
    கடவன் ஆகி காலந்தோறும் * பூப் பறித்து ஏத்த கில்லேன் **
    மட வன் நெஞ்சம் காதல் கூர * வல்வினையேன் அயர்ப்பாய் *
    தடவுகின்றேன் எங்குக் காண்பன் * சக்கரத்து அண்ணலையே? (9)
  • TVM 4.7.10
    3198 சக்கரத்து அண்ணலே என்று * தாழ்ந்து கண்ணீர் ததும்ப *
    பக்கம் நோக்கி நின்று அலந்தேன் * பாவியேன் காண்கின்றிலேன் **
    மிக்க ஞான மூர்த்தி ஆய * வேத விளக்கினை * என்
    தக்க ஞானக் கண்களாலே * கண்டு தழுவுவனே (10)
  • TVM 4.7.11
    3199 ## தழுவி நின்ற காதல் தன்னால் * தாமரைக் கண்ணன் தன்னை *
    குழுவு மாடத் தென் குருகூர் * மாறன் சடகோபன் ** சொல்
    வழுவு இலாத ஒண் தமிழ்கள் * ஆயிரத்துள் இப் பத்தும் *
    தழுவப் பாடி ஆட வல்லார் * வைகுந்தம் ஏறுவரே (11)