Chapter 4

Āzhvār describes how his devotion came to fruition - (சார்வே தவநெறிக்கு)

தமது பக்தி பலித்தமையை ஆழ்வார் அருளிச்செய்தல்

“Krishnā! We don’t want you to shepherd the grazing cows” requests the gopikās. Emperumān responds, “If that is the case, then I will forsake this job”. Compassion, an auspicious trait of emperumān, is elaborated in Āzhvār’s hymns.


### Introduction from Vādhi Kesarī Azhakiya Maṇavāḷa Jīyar

In the fourth chapter, the Āzhvār, even while in

+ Read more

"கண்ணா! நீ பசு நிரை மேய்க்கப் போகேல்" என்றார்கள் இடைப் பெண்கள். "அப்படியாகில் இனி இத்தொழிலை விட்டேன்" என்றானாம் எம்பெருமான். அப்படிப்பட்ட குணத்தில் ஈடுபட்ட ஆழ்வார் கனிவுடன் பாடியுள்ளார்.

பத்தாம் பத்து -நான்காம் திருவாய் மொழி -சார்வே -பிரவேசம் –

தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே

+ Read more
Verses: 3816 to 3826
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will reach Kannan’s ankleted feet
  • TVM 10.4.1
    3816 ## சார்வே தவநெறிக்குத் * தாமோதரன் தாள்கள் *
    கார் மேக வண்ணன் * கமல நயனத்தன் **
    நீர் வானம் மண் எரி கால் ஆய் * நின்ற நேமியான் *
    பேர் வானவர்கள் * பிதற்றும் பெருமையனே (1)
  • TVM 10.4.2
    3817 பெருமையனே வானத்து இமையோர்க்கும் * காண்டற்கு
    அருமையனே * ஆகத்து அணையாதார்க்கு * என்றும்
    திரு மெய் உறைகின்ற * செங்கண் மால் * நாளும்
    இருமை வினை கடிந்து * இங்கு என்னை ஆள்கின்றானே (2)
  • TVM 10.4.3
    3818 ஆள்கின்றான் ஆழியான் * ஆரால் குறைவு உடையம்? *
    மீள்கின்றது இல்லைப் * பிறவித் துயர் கடிந்தோம் **
    வாள் கெண்டை ஒண்கண் * மடப் பின்னை தன் கேள்வன் *
    தாள் கண்டு கொண்டு * என் தலைமேல் புனைந்தேனே (3)
  • TVM 10.4.4
    3819 தலைமேல் புனைந்தேன் * சரணங்கள் * ஆலின்
    இலைமேல் துயின்றான் * இமையோர் வணங்க **
    மலைமேல் தான் நின்று * என் மனத்துள் இருந்தானை *
    நிலை பேர்க்கல் ஆகாமை * நிச்சித்து இருந்தேனே (4)
  • TVM 10.4.5
    3820 நிச்சித்து இருந்தேன் * என் நெஞ்சம் கழியாமை *
    கைச் சக்கரத்து அண்ணல் * கள்வம் பெரிது உடையன் **
    மெச்சப்படான் பிறர்க்கு * மெய் போலும் பொய் வல்லன் *
    நச்சப்படும் நமக்கு * நாகத்து அணையானே (5)
  • TVM 10.4.6
    3821 நாகத்து அணையானை * நாள்தோறும் ஞானத்தால் *
    ஆகத்து அணைப்பார்க்கு * அருள்செய்யும் அம்மானை **
    மாகத்து இள மதியம் * சேரும் சடையானை *
    பாகத்து வைத்தான் தன் * பாதம் பணிந்தேனே (6)
  • TVM 10.4.7
    3822 பணி நெஞ்சே நாளும் * பரம பரம்பரனை *
    பிணி ஒன்றும் சாரா * பிறவி கெடுத்து ஆளும் **
    மணி நின்ற சோதி * மதுசூதன் என் அம்மான் *
    அணி நின்ற செம்பொன் * அடல் ஆழியானே (7)
  • TVM 10.4.8
    3823 ஆழியான் ஆழி * அமரர்க்கும் அப்பாலான் *
    ஊழியான் ஊழி படைத்தான் * நிரை மேய்த்தான் **
    பாழி அம் தோளால் * வரை எடுத்தான் பாதங்கள் *
    வாழி என் நெஞ்சே! * மறவாது வாழ்கண்டாய் (8)
  • TVM 10.4.9
    3824 கண்டேன் கமல மலர்ப் பாதம் * காண்டலுமே *
    விண்டே ஒழிந்த * வினையாயின எல்லாம் **
    தொண்டே செய்து என்றும் * தொழுது வழியொழுக *
    பண்டே பரமன் பணித்த * பணிவகையே (9)
  • TVM 10.4.10
    3825 வகையால் மனம் ஒன்றி * மாதவனை * நாளும்
    புகையால் விளக்கால் * புது மலரால் நீரால் **
    திசைதோறு அமரர்கள் * சென்று இறைஞ்ச நின்ற *
    தகையான் சரணம் * தமர்கட்கு ஓர் பற்றே (10)
  • TVM 10.4.11
    3826 ## பற்று என்று பற்றி ப * ரம பரம்பரனை *
    மல் திண் தோள் மாலை * வழுதி வளநாடன் **
    சொல் தொடை அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
    கற்றார்க்கு ஓர் பற்றாகும் * கண்ணன் கழல் இணையே (11)