Chapter 2

Āndāl waking the Lord's Associates and The Lord Himself - (நாயகனாய் நின்ற)

ஆண்டாள் உறவினர்கள் மற்றும் பெருமாளை எழுப்புதல்
Āndāl waking the Lord's Associates and The Lord Himself - (நாயகனாய் நின்ற)
Introduction & Details
Recitation
Translation

TP 2.16

489 நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய

கோயில்காப்பானே! * கொடித்தோன்றும் தோரண

வாயில்காப்பானே! * மணிக்கதவம்தாள்திறவாய் *

ஆயர்சிறுமியரோமுக்கு * அறைபறை

மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான் *

தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான் *

வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேயம்மா! * நீ

நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். (2)

TP 2.18

491 உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன் *

நந்தகோபாலன்மருமகளே! நப்பின்னாய்! *

கந்தம்கமழுங்குழலி! கடைதிறவாய் *

வந்தெங்குங் கோழியழைத்தனகாண் * மாதவிப்

பந்தல்மேல் பல்கால்குயிலினங்கள்கூவினகாண் *

பந்தார்விரலி! உன்மைத்துனன்பேர்பாட *

செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப *

வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். (2)

TP 2.19

492 குத்துவிளக்கெரிய கோட்டுக்கால்கட்டில்மேல் *

மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறி *

கொத்தலர்பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல் *

வைத்துக்கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் *

மைத்தடங்கண்ணினாய்! நீஉன்மணாளனை *

எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண் *

எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் *

தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.

TP 2.20

493 முப்பத்துமூவ ரமரர்க்குமுன்சென்று *

கப்பம்தவிர்க்கும்கலியே! துயிலெழாய் *

செப்பமுடையாய்! திறலுடையாய்! * செற்றார்க்கு

வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய் *

செப்பென்னமென்முலைச் செவ்வாய்ச்சிறுமருங்குல் *

நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய் *

உக்கமும்தட்டொளியும் தந்துஉன்மணாளனை *

இப்போதே எம்மைநீராட்டேலோரெம்பாவாய்.

TP 2.21

494 ஏற்றகலங்கள் எதிர்பொங்கிமீதளிப்ப *

மாற்றாதேபால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் *

ஆற்றப்படைத்தான்மகனே! அறிவுறாய் *

ஊற்றமுடையாய்! பெரியாய்! * உலகினில்

தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய் *

மாற்றார்உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் *

ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே *

போற்றியாம்வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.

TP 2.22

495 அங்கண்மாஞாலத்தரசர் * அபிமான

பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே *

சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம் *

கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப்பூப்போலே *

செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ? *

திங்களும்ஆதித்தியனும் எழுந்தாற்போல் *

அங்கணிரண்டும்கொண்டு எங்கல்மேல்நோக்குதியேல் *

எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய்.

TP 2.23

496 மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் *

சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து *

வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி *

மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *

போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! * உன்

கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி! * கோப்புடைய

சீரியசிங்காசனத்திருந்து * யாம்வந்த

காரியமாராய்ந்தரு ளேலோரெம்பாவாய். (2)