Look upon Us with Both Your Eyes
கண்கள் இரண்டும் கொண்டு எங்களை நோக்கு

495 அங்கண்மாஞாலத்தரசர் * அபிமான
பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே *
சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம் *
கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப்பூப்போலே *
செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ? *
திங்களும்ஆதித்தியனும் எழுந்தாற்போல் *
அங்கணிரண்டும்கொண்டு எங்கல்மேல்நோக்குதியேல் *
எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய்.