Let Everyone Arise Without Slumber
யாவரும் உறங்காது எழுமின்

490 அம்பரமேதண்ணீரே சோறேயறஞ்செய்யும் *
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் *
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! *
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய் *
அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த *
உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய் *
செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா! *
உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய்.