Come to Sing the Song of Awakening (Tiruppaḷḷiyeḻucci)
திருப்பள்ளி எழுச்சி பாடவா

489 நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப்பானே! * கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! * மணிக்கதவம்தாள்திறவாய் *
ஆயர்சிறுமியரோமுக்கு * அறைபறை
மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான் *
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான் *
வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேயம்மா! * நீ
நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். (2)