Inquire into the Purpose of Our Visit and Bestow Your Grace
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்க

496 மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் *
சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து *
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி *
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! * உன்
கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி! * கோப்புடைய
சீரியசிங்காசனத்திருந்து * யாம்வந்த
காரியமாராய்ந்தரு ளேலோரெம்பாவாய். (2)