TP 2.23

Inquire into the Purpose of Our Visit and Bestow Your Grace

யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்க

Image 1

496 மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் *

சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து *

வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி *

மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *

போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! * உன்

கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி! * கோப்புடைய

சீரியசிங்காசனத்திருந்து * யாம்வந்த

காரியமாராய்ந்தரு ளேலோரெம்பாவாய். (2)

Text size