Chapter 1

Thirukannapuram 1 - (சிலை இலங்கு)

திருக்கண்ணபுரம் 1
Thirukannapuram 1 - (சிலை இலங்கு)
All the verses in this eighth decad are sung in praise of Thirukannapuram Sowriraja Perumal. The Thayar here is Kannapura Nayaki. The āzhvār, having surrendered his heart to Sowriraja Perumal, sings these verses, considering the Lord as the hero and himself as the heroine. The āzhvār has a deep preference for this type of expression, known as Nayaka-Nayaki + Read more
இந்த எட்டாம் பத்திலுள்ள எல்லாப் பாடல்களும் திருக்கண்ணபுர சவுரிராஜப் பெருமாள் விஷயமாகப் பாடப்பட்டனவே. ஈண்டுள்ள தாயாரின் பெயர் கண்ணபுர நாயகி. சவுரிராஜப் பெருமாளிடம் ஆழ்வார் தம் மனத்தைப் பறிகொடுத்தவர். பெருமாளைத் தலைவனாகவும், தம்மைத் தலைவியாகவும் பாவனை செய்துகொண்டு பாடுவதில் ஆழ்வாருக்கு + Read more
Verses: 1648 to 1657
Grammar: Aṟuchīr Āsiriya Viruththam / அறுசீராசிரியவிருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and become a king
  • PT 8.1.1
    1648 ## சிலை இலங்கு பொன் ஆழி * திண் படை தண்டு ஒண் சங்கம்
    என்கின்றாளால் *
    மலை இலங்கு தோள் நான்கே * மற்று அவனுக்கு எற்றே காண்
    என்கின்றாளால் **
    முலை இலங்கு பூம் பயலை * முன்பு ஓட அன்பு ஓடி
    இருக்கின்றாளால் *
    கலை இலங்கு மொழியாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
    கண்டாள்கொலோ? 1
  • PT 8.1.2
    1649 செருவரை முன் ஆசு அறுத்த * சிலை அன்றோ கைத்தலத்தது
    என்கின்றாளால் *
    பொரு வரை முன் போர் தொலைத்த * பொன் ஆழி மற்று ஒரு கை
    என்கின்றாளால் **
    ஒருவரையும் நின் ஒப்பார் * ஒப்பு இலா என் அப்பா
    என்கின்றாளால் *
    கரு வரைபோல் நின்றானைக் * கண்ணபுரத்து அம்மானைக்
    கண்டாள்கொலோ? 2
  • PT 8.1.3
    1650 துன்னு மா மணி முடிமேல் * துழாய் அலங்கல் தோன்றுமால்
    என்கின்றாளால் *
    மின்னு மா மணி மகர குண்டலங்கள் * வில் வீசும்
    என்கின்றாளால் **
    பொன்னின் மா மணி ஆரம் * அணி ஆகத்து இலங்குமால்
    என்கின்றாளால் *
    கன்னி மா மதிள் புடை சூழ் * கண்ணபுரத்து அம்மானைக்
    கண்டாள்கொலோ? 3
  • PT 8.1.4
    1651 தார் ஆய தண் துளப வண்டு * உழுத வரை மார்பன்
    என்கின்றாளால் *
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள்பாகன் * என் அம்மான்
    என்கின்றாளால் **
    ஆரானும் காண்மின்கள் * அம் பவளம் வாய் அவனுக்கு
    என்கின்றாளால் *
    கார் வானம் நின்று அதிரும் * கண்ணபுரத்து அம்மானைக்
    கண்டாள்கொலோ? 4
  • PT 8.1.5
    1652 அடித்தலமும் தாமரையே * அம் கைகளும் பங்கயமே
    என்கின்றாளால் *
    முடித்தலமும் பொன் பூணும் * என் நெஞ்சத்துள் அகலா
    என்கின்றாளால் **
    வடித் தடங் கண் மலரவளோ * வரை ஆகத்துள் இருப்பாள்?
    என்கின்றாளால் *
    கடிக் கமலம் கள் உகுக்கும் * கண்ணபுரத்து அம்மானைக்
    கண்டாள்கொலோ? 5
  • PT 8.1.6
    1653 பேர் ஆயிரம் உடைய பேராளன் * பேராளன் என்கின்றாளால் *
    ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் * எண் தோளன் என்கின்றாளால் **
    நீர் ஆர் மழை முகிலே * நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் *
    கார் ஆர் வயல் அமரும் * கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? 6
  • PT 8.1.7
    1654 செவ் அரத்த உடை ஆடை * அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு
    என்கின்றாளால் *
    அவ் அரத்த அடி இணையும் * அம் கைகளும் பங்கயமே
    என்கின்றாளால் **
    மை வளர்க்கும் மணி உருவம் * மரகதமோ? மழை முகிலோ?
    என்கின்றாளால் *
    கை வளர்க்கும் அழலாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
    கண்டாள்கொலோ? 7
  • PT 8.1.8
    1655 கொற்றப் புள் ஒன்று ஏறி * மன்றூடே வருகின்றான்
    என்கின்றாளால் *
    வெற்றிப் போர் இந்திரற்கும் * இந்திரனே ஒக்குமால்
    என்கின்றாளால் **
    பெற்றக்கால் அவன் ஆகம் * பெண் பிறந்தோம் உய்யோமோ?
    என்கின்றாளால் *
    கற்ற நூல் மறையாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
    கண்டாள்கொலோ? 8
  • PT 8.1.9
    1656 வண்டு அமரும் வனமாலை * மணி முடிமேல் மணம் நாறும்
    என்கின்றாளால் *
    உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று * ஒருகாலும் பிரிகிலேன்
    என்கின்றாளால் **
    பண்டு இவரைக் கண்டு அறிவது * எவ் ஊரில்? யாம் என்றே
    பயில்கின்றாளால் *
    கண்டவர் தம் மனம் வழங்கும் * கண்ணபுரத்து அம்மானைக்
    கண்டாள்கொலோ? 9
  • PT 8.1.10
    1657 # #மா வளரும் மென் நோக்கி * மாதராள் மாயவனைக்
    கண்டாள் என்று *
    கா வளரும் கடி பொழில் சூழ் * கண்ணபுரத்து அம்மானைக்
    கலியன் சொன்ன **
    பா வளரும் தமிழ் மாலை * பன்னிய நூல் இவை ஐந்தும்
    ஐந்தும் வல்லார் *
    பூ வளரும் கற்பகம் சேர் * பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
    புகழ் தக்கோரே 10