
1238 திருமடந்தைமண்மடந்தை இருபாலும்திகழத்
தீவினைகள்போயகலஅடியவர்கட்குஎன்றும்
அருள்நடந்து * இவ்வேழுலகத்தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்தஇருந்தஇடம் * பெரும்புகழ்வேதியர் வாழ்
தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர்
தாமரைகள்தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ *
அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே! (2)
1239 வென்றிமிகுநரகனுரமது அழியவிசிறும்
விறலாழித்தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று
குன்றுகொடுகுரைகடலைக்கடைந்துஅமுதமளிக்கும்
குருமணிஎன்னாரமுதம்குலவியுறைகோயில் *
என்றுமிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்
ஏழிசையும்கேள்விகளும்இயன்றபெருங் குணத்தோர் *
அன்றுஉலகம்படைத்தவனையனையவர்கள்நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
1240 உம்பரும்இவ்வேழுலகும்ஏழ்கடலும்எல்லாம்
உண்டபிரான் அண்டர்கள்முன்கண்டு மகிழ்வெய்த *
கும்பமிகுமதயானைமருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சிபிடித்தடித்தபிரான்கோயில் * மருங் கெங்கும்
பைம்பொனொடுவெண்முத்தம்பலபுன்னைகாட்ட
பலங்கனிகள்தேன்காட்ட, படவரவேரல்குல் *
அம்பனையகண்மடவார்மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
1241 ஓடாதவாளரியின்உருவமதுகொண்டு அன்று
உலப்பில்மிகுபெருவரத்தஇரணியனைப்பற்றி *
வாடாதவள்ளுகிரால்பிளந்து, அவன்தன்மகனுக்கு
அருள்செய்தான்வாழும்இடம், மல்லிகை செங்கழுநீர் *
சேடேறுமலர்ச்செருந்திசெழுங்கமுகம்பாளை
செண்பகங்கள்மணநாறும்வண்பொழிலினூடே *
ஆடேறுவயலாலைப்புகைகமழு நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
1242 கண்டவர்தம்மனம்மகிழமாவலிதன்வேள்விக்
களவில்மிகுசிறுகுறளாய்மூவடியென்றுஇரந்திட்டு *
அண்டமும் இவ்வலைகடலும்அவனிகளுமெல்லாம்
அளந்தபிரான்அமரும்இடம், வளங்கொள் பொழிலயலே *
அண்டமுறுமுழவொலியும்வண்டினங்களொலியும்
அருமறையினொலியும்மடவார்சிலம்பினொலியும் *
அண்டமுறும்அலைகடலினொலிதிகழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
1243 வாள்நெடுங்கண்மலர்க்கூந்தல்மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடியொருபதும்தோளிருபதும்போயுதிர *
தாள்நெடுந்திண்சிலைவளைத்ததயரதன்சேய் என்தன்
தனிச்சரண் வானவர்க்கரசுகருதுமிடம், தடமார் *
சேணிடங்கொள்மலர்க்கமலம்சேல்கயல்கள்வாளை
செந்நெலொடுமடுத்தரியஉதிர்ந்தசெழுமுத்தம் *
வாணெடுங்கண்கடைசியர்கள்வாருமணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
1244 தீமனத்தான்கஞ்சனதுவஞ்சனையில்திரியும்
தேனுகனும்பூதனைதனாருயிரும்செகுத்தான் *
காமனைத்தான்பயந்தகருமேனியுடையம்மான்
கருதுமிடம், பொருதுபுனல்துறைதுறைமுத்து உந்தி *
நாமனத்தால்மந்திரங்கள்நால்வேதம் ஐந்து
வேள்வியோடுஆறங்கம்நவின்றுகலைபயின்று * அங்கு
ஆமனத்துமறையவர்கள்பயிலுமணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
1245 கன்றதனால்விளவெறிந்துகனியுதிர்த்தகாளை
காமருசீர்முகில்வண்ணன், காலிகள்முன்காப்பான் *
குன்றதனால்மழைதடுத்துக்குடமாடுகூத்தன்
குலவும்இடம், கொடிமதிள்கள்மாளிகை கோபுரங்கள் *
துன்றுமணிமண்டபங்கள்சாலைகள் தூமறையோர்
தொக்குஈண்டித்தொழுதியொடுமிகப்பயிலும் சோலை *
அன்றுஅலர்வாய்மதுவுண்டுஅங்குஅளிமுரலும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
1246 வஞ்சனையால்வந்தவள்தன்உயிருண்டு வாய்த்த
தயிருண்டுவெண்ணெயமுதுண்டு * வலிமிக்க
கஞ்சனுயிரதுவுண்டுஇவ்வுலகுண்டகாளை
கருதுமிடம், காவிரிசந்துஅகில்கனகம்உந்தி *
மஞ்சுலவுபொழிலூடும்வயலூடும்வந்து
வளங்கொடுப்பமாமறையோர்மாமலர்கள் தூவி *
அஞ்சலித்துஅங்குஅரிசரணென்று இறைஞ்சுமணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
1247 சென்றுசினவிடையேழும்படஅடர்த்துப் பின்னை
செவ்வித்தோள்புணர்ந்துஉகந்ததிருமால்தன் கோயில் *
அன்றுஅயனும்அரன்சேயும்அனையவர்கள் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம் அமர்ந்தசெழுங்குன்றை *
கன்றிநெடுவேல்வலவன்மங்கையர்தம்கோமான்
கலிகன்றியொலிமாலை ஐந்தினொடுமூன்றும் *
ஒன்றினொடுமொன்றும் இவைகற்றுவல்லார் உலகத்து
உத்தமர்கட்குஉத்தமராய்உம்பரும்ஆவர்களே. (2)