PT 3.10.9

This is the Place Where One Worships, Saying "Hari Śaraṇam"

அரிசரணம் என்று வணங்கும் இடம் இது

1246 வஞ்சனையால்வந்தவள்தன்உயிருண்டு வாய்த்த

தயிருண்டுவெண்ணெயமுதுண்டு * வலிமிக்க

கஞ்சனுயிரதுவுண்டுஇவ்வுலகுண்டகாளை

கருதுமிடம், காவிரிசந்துஅகில்கனகம்உந்தி *

மஞ்சுலவுபொழிலூடும்வயலூடும்வந்து

வளங்கொடுப்பமாமறையோர்மாமலர்கள் தூவி *

அஞ்சலித்துஅங்குஅரிசரணென்று இறைஞ்சுமணி நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

Text size