This is the Abode of Him Who Tore Hiraṇya
இரணியனைப் பிளந்தவன் வாழும் இடம் இது
1241 ஓடாதவாளரியின்உருவமதுகொண்டு அன்று
உலப்பில்மிகுபெருவரத்தஇரணியனைப்பற்றி *
வாடாதவள்ளுகிரால்பிளந்து, அவன்தன்மகனுக்கு
அருள்செய்தான்வாழும்இடம், மல்லிகை செங்கழுநீர் *
சேடேறுமலர்ச்செருந்திசெழுங்கமுகம்பாளை
செண்பகங்கள்மணநாறும்வண்பொழிலினூடே *
ஆடேறுவயலாலைப்புகைகமழு நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!