The Place of Him Who Gave Nectar to the Devas is Arimēya Viṇṇakaram
தேவர்களுக்கு அமுதளித்தவன் இடம் அரிமேய விண்ணகரம்
1239 வென்றிமிகுநரகனுரமது அழியவிசிறும்
விறலாழித்தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று
குன்றுகொடுகுரைகடலைக்கடைந்துஅமுதமளிக்கும்
குருமணிஎன்னாரமுதம்குலவியுறைகோயில் *
என்றுமிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்
ஏழிசையும்கேள்விகளும்இயன்றபெருங் குணத்தோர் *
அன்றுஉலகம்படைத்தவனையனையவர்கள்நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!