The Temple of the One Who Measured the Worlds is Arimēya Viṇṇakaram
உலகளந்தவன் கோயில் அரிமேய விண்ணகரம்
1242 கண்டவர்தம்மனம்மகிழமாவலிதன்வேள்விக்
களவில்மிகுசிறுகுறளாய்மூவடியென்றுஇரந்திட்டு *
அண்டமும் இவ்வலைகடலும்அவனிகளுமெல்லாம்
அளந்தபிரான்அமரும்இடம், வளங்கொள் பொழிலயலே *
அண்டமுறுமுழவொலியும்வண்டினங்களொலியும்
அருமறையினொலியும்மடவார்சிலம்பினொலியும் *
அண்டமுறும்அலைகடலினொலிதிகழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!