Your browser does not support the audio element.
audio
978 ஏனமுனாகி இருநிலமிடந்து *
அன்று இணையடி இமையவர் வணங்க *
தானவனாகம் தரணியில் புரளத் *
தடஞ்சிலை குனித்தவென்தலைவன் **
தேனமர்சோலைக் கற்பகம் பயந்த *
தெய்வநல்நறுமலர் கொணர்ந்து *
வானவர்வணங்கும் கங்கையின் கரைமேல் *
வதரியாச்சிராமத்துள்ளானே (2)
979 கானிடையுருவைச் சுடுசரம் துரந்து *
கண்டுமுன்கொடுந்தொழிலுரவோன் *
ஊனுடையகலத்து அடுகணைகுளிப்ப *
உயிர்க்கவர்ந்துகந்தஎம்ஒருவன் **
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் *
சென்றுசென்றிறைஞ்சிட *
பெருகு வானிடைமுதுநீர்க்கங்கையின்கரைமேல் *
வதரியாச்சிராமத்துள்ளானே
980 இலங்கையும்கடலும்அடலருந்துப்பின் *
இருநிதிக்கிறைவனும் *
அரக்கர் குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த கொற்றவன் * கொழுஞ்சுடர்சுழன்ற **
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில் *
வெண்துகிற்கொடியெனவிரிந்து *
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல் *
981 துணிவுஇனிஉனக்குச்சொல்லுவன்மனமே! *
தொழுதெழுதொண்டர்கள்தமக்கு *
பிணியொழித்துஅமரர்பெருவிசும்பருளும் *
பேரருளாளன்எம்பெருமான் *
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் *
ஆரமும்வாரிவந்து *
அணிநீர் மணிகொழித்திழிந்தகங்கையின்கரைமேல் *
982 பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் *
பெருமுலைசுவைத்திட *
பெற்ற தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட * வளர்ந்தஎன்தலைவன் **
சேய்முகட்டுச்சியண்டமும்சுமந்த *
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு *
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் *
983 தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்துஒருமறத்தொழில் புரிந்து *
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணன் எம்பெருமான் *
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி *
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
984 வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும் *
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தைஎம்மடிகள்எம்பெருமான் *
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி *
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
985 மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன் பொன்னிறத்து உரவோன் *
ஊன்முனிந்துஅவனதுடல் இருபிளவா
உகிர்நுதிமடுத்து * அயன்அரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
தவிர்த்தவன் * தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
986 கொண்டல்மாருதங்கள் குலவரைதொகுநீர்க்
குரைகடலுலகுடன் அனைத்தும் *
உண்டமாவயிற்றோன் ஒண்சுடரேய்ந்த
உம்பரும் ஊழியும் ஆனான் *
அண்டமூடறுத்துஅன்று அந்தரத்துஇழிந்து
அங்குஅவனியாள் அலமர * பெருகும்
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
987 வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை *
கருங்கடல்முந்நீர்வண்ணனை எண்ணிக்
கலியன்வாயொலி செய்தபனுவல் *
வரஞ்செய்தவைந்துமைந்தும் வல்லார்கள்
வானவருலகுடன்மருவி *
இருங்கடலுலகம்ஆண்டு வெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே. (2)