Your browser does not support the audio element.
audio
423 துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே *
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால் *
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் *
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2)
424 சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே! *
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள் *
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை *
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
425 எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது *
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே! *
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும் *
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
426 ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே! *
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா! *
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற *
அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும்
427 பையரவினணைப் பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி! *
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை *
வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக்
காலனையும்உடனேபடைத்தாய் *
ஐய! இனிஎன்னைக்காக்கவேண்டும்
428 தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர் *
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்! *
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும் *
அண்ணலே! நீஎன்னைக்காக்கவேண்டும்
429 செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே! எம்மானே! *
எஞ்சலிலென்னுடையின்னமுதே!
ஏழுலகுமுடையாய்! என்னப்பா! *
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது *
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
430 நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு * இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் *
வானேய்வானவர்தங்களீசா!
மதுரைப்பிறந்தமாமாயனே! * என்
ஆனாய்! நீஎன்னைக்காக்கவேண்டும்
431 குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா!
கோநிரைமேய்த்தவனே! எம்மானே! *
அன்றுமுதல் இன்றறுதியா
ஆதியஞ்சோதி! மறந்தறியேன் *
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது *
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
432 மாயவனைமதுசூதனனை
மாதவனைமறையோர்களேத்தும் *
ஆயர்களேற்றினைஅச்சுதனை
அரங்கத்தரவணைப்பள்ளியானை *
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் *
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்காளர்தாமே. (2)