Gokulam

474 மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால் *
நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்! *
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்! *
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன் *
ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் *
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான் *
நாராயணனே நமக்கேபறைதருவான் *
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2)
2685 - ஆழிநீர்
ஆரால்கடைந்திடப்பட்டது? * - அவன்காண்மின்
ஊராநிரைமேய்த்து உலகெல்லாமுண்டுமிழ்ந்தும் *
ஆராததன்மையனாய் ஆங்கொருநாளாய்ப்பாடி *
சீரார்கலயல்குல் சீரடிசெந்துவர்வாய் *
வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு *
ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய் *
சீரார்தயிர்கடைந்து வெண்ணெய்திரண்டதனை *
வேரார்நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு *
நாராருறியேற்றி நன்கமையவைத்ததனை *
போரார்வேற்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம் *
ஓராதவன்போல் உறங்கியறிவுற்று *
தாரார்தடந்தோள்கள் உள்ளளவும்கைநீட்டி *
ஆராதவெண்ணெய்விழுங்கி *