1504 முலைத்தடத்தநஞ்சுண்டுதுஞ்சப்பேய்ச்சி
முதுதுவரைக்குலபதியாக்காலிப்பின்னே *
இலைத்தடத்தகுழலூதி ஆயர்மாதர்
இனவளைகொண்டானடிக்கீழ்எய்தகிற்பீர்! *
மலைத்தடத்தமணிகொணர்ந்துவையம்உய்ய
வளங்கொடுக்கும்வருபுனலம்பொன்னிநாடன் *
சிலைத்தடக்கைக்குலச்சோழன்சேர்ந்தகோயில்
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.