I Have Resolved Myself for the Lord of Dvārakā Alone
துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துக் கொண்டேன்
507 சுவரில்புராண! நின்பேரெழுதிச்
சுறவநற்கொடிகளும்துரங்கங்களும் *
கவரிப்பிணாக்களும்கருப்புவில்லும்
காட்டித்தந்தேன் கண்டாய்காமதேவா! *
அவரைப்பிராயந்தொடங்கி என்றும்
ஆதரித்தெழுந்தவென்தடமுலைகள் *
துவரைப்பிரானுக்கேசங்கற்பித்துத்
தொழுதுவைத்தேனொல்லைவிதிக்கிற்றியே.