PT 4.8.7

My Daughter Sings of the God of Gods of Nāṅkūr

நாங்கைத் தேவதேவனை என் மகள் பாடுவாள்

1324 நாடிஎன்தன்உள்ளம்கொண்ட நாதனென்றும் * நான்மறைகள்

தேடியென்றும்காணமாட்டாச் செல்வனென்றும் * சிறைகொள்வண்டு

சேடுலவுபொழில்கொள்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *

பாடகம்சேர்மெல்லடியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.

Text size