வேதமே சொல்ல முடியாமல் மீள ஜகத்துக்கு வந்த ஆபத்தை அவனே வந்து ரஷித்தான் ஆறி இருக்க ஒண்ணாதோ வாய் புலற்ற வேண்டுமோ அப்படி இருக்க ஒட்டாமல் நெஞ்சைக் கைக் கொண்டான்
நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப் பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே