Chapter 8

Thirunāngur Thiruppārthanpalli - (கவள யானை)

திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி
Thirunāngur Thiruppārthanpalli - (கவள யானை)
In response to Varuna's request, Sriman Narayana is in the form of Parthasarathy at this place. Therefore, this Divya Desam is known as Parthan Palli. Those who wish to visit this village should travel along the Sirkazhi-Poompuhar road. The presiding deity here is Tamarayal Kelvan. The āzhvār, assuming the role of a Nayaki, sings in this place, expressing his longing for the Lord and narrating his actions, similar to how a good mother would lament and express her feelings.
வருணனது வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீமந் நாராயணன் பார்த்தசாரதி திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இடம் இது. அதனால் இந்தத் திவ்விய தேசத்திற்குப் பார்த்தன் பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூருக்குச் செல்வோர் சீர்காழி பூம்புகார்ச் சாலையில் இறங்கிச் செல்லவேண்டும். பெருமாள் தாமரையாள் கேள்வன். + Read more
Verses: 1318 to 1327
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be happy with the Gods
  • PT 4.8.1
    1318 ## கவள யானைக் கொம்பு ஒசித்த *
    கண்ணன் என்றும் காமரு சீர்க் *
    குவளை மேகம் அன்ன மேனி *
    கொண்ட கோன் என் ஆனை என்றும் **
    தவள மாடம் நீடு நாங்கைத் *
    தாமரையாள் கேள்வன் என்றும் *
    பவள வாயாள் என் மடந்தை *
    பார்த்தன்பள்ளி பாடுவாளே 1
  • PT 4.8.2
    1319 கஞ்சன் விட்ட வெம் சினத்த *
    களிறு அடர்த்த காளை என்றும் *
    வஞ்சம் மேவி வந்த பேயின் *
    உயிரை உண்ட மாயன் என்றும் **
    செஞ்சொலாளர் நீடு நாங்கைத் *
    தேவ தேவன் என்று என்று ஓதி *
    பஞ்சி அன்ன மெல் அடியாள் *
    பார்த்தன்பள்ளி பாடுவாளே 2
  • PT 4.8.3
    1320 அண்டர் கோன் என் ஆனை என்றும் *
    ஆயர் மாதர் கொங்கை புல்கு
    செண்டன் என்றும் * நான்மறைகள்
    தேடி ஓடும் * செல்வன் என்றும் **
    வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை *
    மன்னும் மாயன் என்று என்று ஓதி *
    பண்டுபோல் அன்று என் மடந்தை *
    பார்த்தன்பள்ளி பாடுவாளே 3
  • PT 4.8.4
    1321 கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் *
    கோல் வளையார் தம் முகப்பே *
    மல்லை முந்நீர் தட்டு இலங்கை *
    கட்டு அழித்த மாயன் என்றும் **
    செல்வம் மல்கு மறையோர் நாங்கைத் *
    தேவ தேவன் என்று என்று ஓதி *
    பல் வளையாள் என் மடந்தை *
    பார்த்தன்பள்ளி பாடுவாளே 4
  • PT 4.8.5
    1322 அரக்கர் ஆவி மாள அன்று *
    ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற *
    குரக்கரசன் என்றும் * கோல
    வில்லி என்றும் ** மா மதியை
    நெருக்கும் மாடம் நீடு நாங்கை *
    நின்மலன் தான் என்று என்று ஓதி *
    பரக்கழிந்தாள் என் மடந்தை *
    பார்த்தன்பள்ளி பாடுவாளே 5
  • PT 4.8.6
    1323 ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த *
    நாதன் என்றும் நானிலம் சூழ் *
    வேலை அன்ன கோல மேனி *
    வண்ணன் என்றும் ** மேல் எழுந்து
    சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் *
    தேவ தேவன் என்று என்று ஓதி *
    பாலின் நல்ல மென் மொழியாள் *
    பார்த்தன்பள்ளி பாடுவாளே 6
  • PT 4.8.7
    1324 நாடி என் தன் உள்ளம் கொண்ட *
    நாதன் என்றும் * நான்மறைகள்
    தேடி என்றும் காண மாட்டாச் *
    செல்வன் என்றும் ** சிறை கொள் வண்டு
    சேடு உலவு பொழில் கொள்
    நாங்கைத் * தேவ தேவன் என்று என்று ஓதி *
    பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 7
  • PT 4.8.8
    1325 உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் *
    ஒண் சுடரோடு உம்பர் எய்தா *
    நிலவும் ஆழிப் படையன் என்றும் *
    நேசன் என்றும் ** தென் திசைக்குத்
    திலதம் அன்ன மறையோர் நாங்கைத் *
    தேவ தேவன் என்று என்று ஓதி *
    பலரும் ஏச என் மடந்தை *
    பார்த்தன்பள்ளி பாடுவாளே 8
  • PT 4.8.9
    1326 கண்ணன் என்றும் வானவர்கள் *
    காதலித்து மலர்கள் தூவும் *
    எண்ணன் என்றும் இன்பன் என்றும் *
    ஏழ் உலகுக்கு ஆதி என்றும் **
    திண்ண மாடம் நீடு நாங்கைத் *
    தேவ தேவன் என்று என்று ஓதி *
    பண்ணின் அன்ன மென் மொழியாள் *
    பார்த்தன்பள்ளி பாடுவாளே 9
  • PT 4.8.10
    1327 ## பாருள் நல்ல மறையோர் நாங்கைப் *
    பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை *
    வார் கொள் நல்ல முலை மடவாள்
    பாடலைத் * தாய் மொழிந்த மாற்றம் **
    கூர் கொள் நல்ல வேல் கலியன் *
    கூறு தமிழ் பத்தும் வல்லார் *
    ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் *
    இன்பம் நாளும் எய்துவாரே 10