
1140 கொழுந்தலரும்மலர்ச்சோலைக்குழாங்கொள்பொய்கைக்
கோள்முதலைவாளெயிற்றுக்கொண்டற்குஎள்கி *
அழுந்தியமாகளிற்றினுக்குஅன்றுஆழியேந்தி
அந்தரமேவரத்தோன்றி அருள்செய்தானை *
எழுந்தமலர்க்கருநீலம்இருந்தில்காட்ட
இரும்புன்னைமுத்தரும்பிச்செம்பொன்காட்ட *
செழுந்தடநீர்க்கமலம்தீவிகைபோல்காட்டும்
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.