வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி மல் பொருது எழப் பாய்ந்த அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே –4-7-7-
பதவுரை
அற்புதம் உடைய–ஆச்சர்யமான ஐராவதம்–‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய மதமும்–மத நீரும், அவர்–அத் தேவர்கள்