Your browser does not support the audio element.
audio
3618 எல்லியும்காலையும் தன்னைநினைந்தெழ *
நல்லவருள்கள் நமக்கேதந்தருள்செய்வான் *
அல்லியந்தண்ணந்துழாய்முடி அப்பனூர் *
செல்வர்கள்வாழும் திருக்கடித்தானமே. (2)
3619 திருக்கடித்தானமும் என்னுடைச்சிந்தையும் *
ஒருக்கடுத்து உள்ளேஉறையும்பிரான்கண்டீர் *
செருக்கடுத்து அன்றுதிகைத்தவரக்கரை *
உருக்கெட வாளிபொழிந்தஒருவனே.
3620 ஒருவரிருவர் ஓர்மூவரெனநின்று *
உருவுகரந்து உள்ளுந்தோறும்தித்திப்பான் *
திருவமர்மார்வன் திருக்கடித்தானத்தை *
மருவியுரைகின்ற மாயப்பிரானே.
3621 மாயப்பிரான் எனவல்வினைமாய்ந்தற *
நேயத்தினால் நெஞ்சம்நாடுகுடிகொண்டான் *
தேசத்தமரர் திருக்கடித்தானத்தை *
வாசப்பொழில் மன்னுகோயில்கொண்டானே.
3622 கோயில்கொண்டான் தன்திருக்கடித்தானத்தை *
கோயில்கொண்டான் அதனோடுமென்னெஞ்சகம் *
கோயில்கொள் தெய்வமெல்லாம்தொழ * வைகுந்தம்
கோயில்கொண்ட குடக்கூத்தவம்மானே.
3623 கூத்தவம்மான் கொடியேனிடர்முற்றவும் *
மாய்த்தவம்மான் மதுசூதவம்மானுறை *
பூத்தபொழில் தண்திருக்கடித்தானத்தை *
ஏத்தநில்லா குறிக்கொண்மின்இடரே.
3624 கொண்மின்இடர்கெட உள்ளத்துக்கோவிந்தன் *
மண்விண்முழுதும்அளந்த ஒண்தாமரை *
மண்ணவர்தாம்தொழ வானவர்தாம்வந்து *
நண்ணு திருக்கடித்தானநகரே.
3625 தானநகர்கள் தலைச்சிறந்தெங்கெங்கும் *
வானிந்நிலம்கடல் முற்றும்எம்மாயற்கே *
ஆனவிடத்தும் என்நெஞ்சும் திருக்கடித்
தானநகரும் * தனதாயப்பதியே.
3626 தாயப்பதிகள் தலைச்சிறந்தெங்கெங்கும் *
மாயத்தினால் மன்னிவீற்றிருந்தானுறை *
தேயத்தமரர் திருக்கடித்தானத்துள் *
ஆயர்க்கதிபதி அற்புதன்தானே.
3627 அற்புதன்நாராயணன் அரிவாமனன் *
நிற்பதுமேவி இருப்பதென்னெஞ்சகம் *
நற்புகழ்வேதியர் நான்மறைநின்றதிர் *
கற்பகச்சோலைத் திருக்கடித்தானமே.
3628 சோலைத்திருக்கடித்தானத்து உறைதிரு
மாலை * மதிள்குருகூர்ச் சடகோபன்சொல் *
பாலோடமுதன்ன ஆயிரத்துஇப்பத்தும் *
மேலைவைகுந்தத்து இருத்தும்வியந்தே. (2)