Chapter 9

Sāthmya bhōga pradhathvam (bestowing bliss in a step-by-step manner) - (இவையும் அவையும்)

ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை
As a mother feeds her child morsel by morsel to nourish her child’s growth, so does Bhagavān allow His devotees to enjoy Him a little at a time (in increments). Bhagavān decides to sit on Nammāzhvār’s head (thirumudi). In order to do so, He initially stands near the rear end of Āzhvār; He comes closer; stands much closer to Āzhvār; sits on Āzhvār’s + Read more
குழந்தைக்குத் தாய் உணவிட்டு வளர்ப்பதுபோல், பகவானும் அடியார்களுக்குத் தன்னை அனுபவிக்கும் இன்பத்தைச் சிறிது சிறிதாகவே தருகிறான். நம்மாழ்வாரின் திருமுடியிலே வந்து அமரவேண்டும் என்று எண்ணிய பகவான், ஆழ்வாரின் சுற்றுப் பக்கத்தில் நின்றான்; அருகில் வந்தான்; கூடி நின்றான்; இடுப்பில் அமர்ந்தான்; + Read more
Verses: 2879 to 2889
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: He will keep them beneath His divine ankleted feet
  • TVM 1.9.1
    2879 ## இவையும் அவையும் * உவையும் இவரும் அவரும் உவரும் *
    எவையும் எவரும் தன்னுள்ளே * ஆகியும் ஆக்கியும் காக்கும் **
    அவையுள் தனிமுதல் எம்மான் * கண்ண பிரான் என் அமுதம் *
    சுவையன் திருவின் மணாளன் * என்னுடைச் சூழல் உளானே (1)
  • TVM 1.9.2
    2880 சூழல் பலபல வல்லான் * தொல்லை அம் காலத்து உலகை *
    கேழல் ஒன்று ஆகி இடந்த * கேசவன் என்னுடை அம்மான் **
    வேழ மருப்பை ஒசித்தான் * விண்ணவர்க்கு எண்ணல் அரியான் *
    ஆழ நெடுங் கடல் சேர்ந்தான் * அவன் என் அருகலிலானே (2)
  • TVM 1.9.3
    2881 அருகல் இலாய பெரும் சீர் * அமரர்கள் ஆதி முதல்வன் *
    கருகிய நீல நன் மேனி வண்ணன் * செந்தாமரைக் கண்ணன் **
    பொரு சிறைப் புள் உவந்து ஏறும் * பூமகளார் தனிக் கேள்வன் *
    ஒருகதியின் சுவை தந்திட்டு * ஒழிவு இலன் என்னோடு உடனே (3)
  • TVM 1.9.4
    2882 உடன் அமர் காதல் மகளிர் * திருமகள் மண்மகள் ஆயர் *
    மட மகள் * என்று இவர் மூவர் ஆளும் * உலகமும் மூன்றே **
    உடன் அவை ஒக்க விழுங்கி * ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான் *
    கடல் மலி மாயப் பெருமான் * கண்ணன் என் ஒக்கலையானே (4)
  • TVM 1.9.5
    2883 ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று * தந்திட வாங்கி *
    செக்கம் செக அன்று அவள்பால் * உயிர் செக உண்ட பெருமான் **
    நக்க பிரானோடு * அயனும் இந்திரனும் முதலாக *
    ஒக்கவும் தோற்றிய ஈசன் * மாயன் என் நெஞ்சின் உளானே (5)
  • TVM 1.9.6
    2884 மாயன் என் நெஞ்சின் உள்ளான் * மற்றும் எவர்க்கும் அதுவே *
    காயமும் சீவனும் தானே * காலும் எரியும் அவனே **
    சேயன் அணியன் எவர்க்கும் * சிந்தைக்கும் கோசரம் அல்லன் *
    தூயன் துயக்கன் மயக்கன் * என்னுடைத் தோளிணையானே (6)
  • TVM 1.9.7
    2885 தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் * சுடர் முடி மேலும் *
    தாள் இணை மேலும் புனைந்த * தண் அம் துழாய் உடை அம்மான் **
    கேள் இணை ஒன்றும் இலாதான் * கிளரும் சுடர் ஒளி மூர்த்தி *
    நாள் அணைந்து ஒன்றும் அகலான் * என்னுடை நாவின் உளானே (7)
  • TVM 1.9.8
    2886 நாவினுள் நின்று மலரும் * ஞானக் கலைகளுக்கு எல்லாம் *
    ஆவியும் ஆக்கையும் தானே * அழிப்போடு அளிப்பவன் தானே **
    பூ இயல் நால் தடம் தோளன் * பொரு படை ஆழி சங்கு ஏந்தும் *
    காவி நன் மேனிக் கமலக் கண்ணன் * என் கண்ணின் உளானே (8)
  • TVM 1.9.9
    2887 கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் * காண்பன் அவன் கண்களாலே *
    அமலங்கள் ஆக விழிக்கும் * ஐம்புலனும் அவன் மூர்த்தி **
    கமலத்து அயன் நம்பி தன்னைக் * கண்ணுதலானொடும் தோற்றி *
    அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி * என் நெற்றி உளானே (9)
  • TVM 1.9.10
    2888 நெற்றியுள் நின்று என்னை ஆளும் * நிரை மலர்ப் பாதங்கள் சூடி *
    கற்றைத் துழாய் முடிக் கோலக் * கண்ண பிரானைத் தொழுவார் **
    ஒற்றைப் பிறை அணிந்தானும் * நான்முகனும் இந்திரனும் *
    மற்றை அமரரும் எல்லாம் வந்து * எனது உச்சியுளானே (10)
  • TVM 1.9.11
    2889 ## உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்குக் * கண்ண பிராற்கு *
    இச்சையுள் செல்ல உணர்த்தி * வண் குருகூர்ச் சடகோபன் **
    இச் சொன்ன ஆயிரத்துள் * இவையும் ஓர் பத்து எம்பிராற்கு *
    நிச்சலும் விண்ணப்பம் செய்ய * நீள் கழல் சென்னி பொருமே (11)