
2685 - ஆழிநீர்
ஆரால்கடைந்திடப்பட்டது? * - அவன்காண்மின்
ஊராநிரைமேய்த்து உலகெல்லாமுண்டுமிழ்ந்தும் *
ஆராததன்மையனாய் ஆங்கொருநாளாய்ப்பாடி *
சீரார்கலயல்குல் சீரடிசெந்துவர்வாய் *
வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு *
ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய் *
சீரார்தயிர்கடைந்து வெண்ணெய்திரண்டதனை *
வேரார்நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு *
நாராருறியேற்றி நன்கமையவைத்ததனை *
போரார்வேற்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம் *
ஓராதவன்போல் உறங்கியறிவுற்று *
தாரார்தடந்தோள்கள் உள்ளளவும்கைநீட்டி *
ஆராதவெண்ணெய்விழுங்கி *
2695 - திருதுழாய்த்
தாரார்ந்தமார்வன் தடமால்வரைபோலும் *
போரானைபொய்கைவாய்க் கோட்பட்டுநின்றலறி *
நீரார்மலர்க்கமலம்கொண்டு ஓர்நெடுங்கையால் *
நாராயணா! ஓ! மணிவண்ணா! நாகணையாய்! *
வாராய்என்னாரிடரைநீக்காய் * - எனவெகுண்டு
தீராதசீற்றத்தால் சென்றிரண்டுகூறாக *
ஈராவதனையிடர்கடிந்தான் எம்பெருமான் *
பேராயிரமுடையான் பேய்ப்பெண்டீர்! நும்மகளை *
தீராநோய்செய்தான் எனவுரைத்தாள் * - சிக்கெனமற்று